ஐஸ்வர்யாராய் அபிஷேக்பச்சன் விவாகரத்து?

 
ஐஸ்வர்யாராய் அபிஷேக்பச்சன்

 முன்னாள் உலக அழகியான , பாலிவுட் நட்சத்திர நாயகி ஐஸ்வர்யா ராய் . இவர் அமிதாப் குடும்பத்தில் அபிஷேக் பச்சனை திருமணம் செய்துகொண்டார். இவர்களின் மகள் ஆராத்யா. ஐஸ்வர்யா ராய் பிரபல பாலிவுட் நடிகரான அபிஷேக் பச்சனை காதலித்து  2007ல்  திருமணம் செய்துகொண்டார். 2011ல்  பெண் குழந்தை ஆராத்யாவுக்கு தாயானார்  என்பது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் ஐஸ்வர்யாவுக்கும், அபிஷேக் பச்சனுக்கும் கருத்து வேறுபாடு நிலவி வருவதாக கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வருகின்றன.   இத்தகவலால் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

ஐஸ்வர்யாராய் அபிஷேக்பச்சன்

இது குறித்து   உமர் சந்த் தான் ”அபிஷேக் பச்சன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட போது அவருடைய கையில் திருமண மோதிரம் இல்லை .  அவருடைய விவாகரத்து செய்தி உண்மை தான்” எனக் கூறியிருந்தார்.   நடிகை ஐஸ்வர்யா ராய்  தன்னுடைய மகள் ஆராத்யாவுடன் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில்  மகளுடன் இணைந்து கொண்டு எந்த கவலையும் இல்லாமல் நடனம் ஆடியது வைரலாகியது.  இருவருக்கும் விவாகரத்து நடந்திருந்தால் எதற்காக ஐஸ்வர்யா ராய் அவருடைய மகளுடன் இணைந்து நடனம் ஆட போகிறார்? என மற்றொரு புறம் கேள்வி உருவானது.  

ஐஸ்வர்யாராய் அபிஷேக்பச்சன்

இந்த செய்தி பெரிய அளவில் வைரலானதால் இதை பற்றி ஐஸ்வர்யா ராய் அல்லது அபிஷேக் பச்சன் இருவரும் அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் தெரிவிக்கவில்லை இதுவரை பதில் அளிக்காமல் இருந்து வந்த இருவரும் தங்களுடைய செயல் மூலமே விளக்கம் அளித்துள்ளனர்.அதன்படி, விவாகரத்து வதந்தி செய்தி வைரலானதை தொடர்ந்து ஐஸ்வர்யா ராய் தனது கணவர் அபிஷேக் பச்சனுடன் இணைந்து நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார்.  இவர்களுடைய விவாகரத்து செய்தி முற்றிலும் வதந்தியான ஒரு தகவல் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.  

ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம் சிறப்புக்கள்

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!

சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!

From around the web