”லைக்கா” வை காணவில்லை... “தல” ரசிகர்கள் பேனர் வைத்து அட்ராசிட்டி!
தமிழ் திரையுலகில் ”தல” ஆக கொண்டாடப்படும் அஜித்தின் 62வது திரைப்படம் ”விடாமுயற்சி” படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு 2023 மே மாதம் அறிவிக்கப்பட்டது. அஜித்தின் பிறந்தநாளில் இயக்குநர் மகிழ் திருமேனி இப்படத்தை இயக்க இருப்பதாகவும், இப்படத்திற்கான இசை அனிருத் எனவும் லைகா நிறுவனம் அறிவித்து இருந்தது. அக்டோபர் மாதம் அஜர்பைஜானில் விடாமுயற்சி பட ஷூட்டிங் தொடங்கியது. விடாமுயற்சி திரைப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக த்ரிஷாவும், வில்லனாக ஆரவ் மற்றும் அர்ஜுனும் நடிக்கின்றனர். இப்படத்தில் ரெஜினா கசெண்ட்ராக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக கூறப்பட்டது.
பெரும்பாலான படப்பிடிப்பு அஜர்பைஜான் நாட்டில் நடைபெற்று முடிந்த நிலையில் மீதமான படப்பிடிப்பு சென்னையில் நடக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இறுதிக்கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். அஜித் படம் என்றாலே ரசிகர்கள் அப்டேட்டுக்காக காத்துக் கிடப்பது தான் வழக்கம். வலிமை, துணிவு போன்ற படங்களின் அப்டேட்டுகள் மிகப்பெரிய முயற்சிக்கு பின்னரே வெளியானது. அதே போ தான் தற்போது விடாமுயற்சி படத்திற்கும் நிலவி வருகிறது. அப்படத்தின் அப்டேட் 300 நாட்களை தொடர்ந்து வெளியாகவில்லை. கடுப்பான ரசிகர்கள் நூதன முறையில் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
புதுச்சேரியில் அஜித் நடித்துள்ள வாலி திரைப்படம் ரீ-ரிலீஸ் ஆகி உள்ள நிலையில், ரசிகர்கள் சிலர் கையில் ஒரு பேனரை கொண்டு வந்தனர். அந்த பேனரில், விடாமுயற்சி படத்தின் டைட்டில் வெளியிட்டு 300 நாள் ஆச்சு, படத்தோட அப்டேட் என்னாச்சு என எழுதப்பட்டுள்ளது. லைக்காவை காணவில்லை, கண்டுபிடித்து தருபவர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும் எனவும் எழுதப்பட்டுள்ளது. இந்த பேனர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
மாசி மாதத்துல இத்தனை விசேஷமா... இந்த நட்சத்திர தினங்களை மிஸ் பண்ணாதீங்க!