நாளை அனைத்து சினிமா, சீரியல் படப்பிடிப்புகளும் ரத்து!

 
 படப்பிடிப்பு
நாளை ஜூலை 25ம் தேதி சென்னையில் அனைத்து திரைப்பட, சீரியல் படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த வாரம் நடிகர் கார்த்தியின் சர்தார் 2 படப்பிடிப்பில் நடித்துக் கொண்டிருந்த போது, சண்டைக் காட்சியில் ஸ்டண்ட் கலைஞர் ஏழுமலை 20 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். அவர் உயரத்தில் இருந்து பாதுகாப்பில்லாமல் விழுந்ததில் மார்பில் அடிபட்டு ரத்தக்கசிவு ஏற்பட்டு உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து படப்பிடிப்புக்களில் பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நாளை ஜூலை 25ம் தேதி அனைத்து சினிமா படப்பிடிப்புகளும்  ரத்து செய்யப்பட்டுள்ளன.

ஏழுமலை  
இது குறித்து பெப்சி சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “படப்பிடிப்பு நடக்கும் போது தகுந்த பாதுகாப்பு கருவிகள், ஆம்புலன்ஸ் வசதிகள் அளிக்கப்பட வேண்டும் என தொடர்ந்து  தயாரிப்பாளர்களுக்கு  வேண்டுகோள் விடுக்கப்பட்டு வருகின்றன. பெரும்பாலான நிறுவனங்கள் இதை பின்பற்றுவது இல்லை. அதனால் சங்க உறுப்பினர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நாளை ஜூலை 25ம் தேதி  கமலா திரையரங்கில் காலை 9 மணிக்கு சிறப்பு கூட்டம் நடத்தப்படுகிறது. அனைத்து சங்க உறுப்பினர்களும் கலந்து கொள்ள ஏதுவாக, சென்னையில் உள்ளூர் படப்பிடிப்புகள் சின்னத்திரை, பெரியதிரை நடைபெறாது.

படப்பிடிப்பு

இக்கூட்டத்தில், திரைப்பட மற்றும் டிவி வெளிப்புற லைட்மேன் சங்கம், சினி மற்றும் டிவி அவுட்டோர் யூனிட் டெக்னீஷியன் சங்கம், சண்டை இயக்குநர்கள், கலைஞர்கள் சங்கம், நடன இயக்குநர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கம், செட்டிங் ஒர்க்கர்ஸ் யூனியன் ஆகிய 5 சங்கங்களின் அனைத்து உறுப்பினர்களும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்” என அறிவித்துள்ளது.  

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web