நாளை சென்னையில் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை! அரையாண்டு தேர்வுகள் ஒத்திவைப்பு!

 
விடுமுறை

நாளை சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவித்து உத்தரவிடப்பட்டுள்ளது. அதே சமயம் நாளை நடைப்பெற இருக்கும் அரையாண்டு தேர்வுகள் மழை, வெள்ளத்தாலும், புயலாலும் பாதிக்கப்பட்டிருக்கும் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஒத்தி வைத்து உத்தரவிடப்பட்டுள்ளது. சென்னையில் கனமழை ஓய்ந்து, மிக்ஜாம் புயல் கடந்த பின்பும், குடியிருப்பு பகுதிகளில் தேங்கியிருக்கும் வெள்ளம் முழுவதுமாக வடியவில்லை. பல பகுதிகளில் இன்னும் மின்சார விநியோகம் சீர் செய்யப்படாத நிலையில், கடந்த இரு தினங்களாக உண்ண உணவும் இல்லாமல், குடிக்க நீரும் இல்லாமல் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

சென்னை உட்பட திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்கலும் இன்னும் புயல் பாதிப்பில் இருந்து மீளாமல் இருக்கிறது. திரும்புகிற இடங்களில் எல்லாம் வெள்ளக்காடாக மிதக்கிறது சென்னை. சென்னையில் அனைத்து சுரங்கப்பாதைகளும் மூடப்பட்டுள்ளன. முக்கிய சாலைகளிலும் மழை நீர் தேங்கியுள்ளது. மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன. குடியிருப்பு பகுதியில் உள்ள வீடுகளில் மழை நீர் புகுந்துள்ளது.

மழை

முக்கிய சாலைகளில் பெரும்பான்மையான இடங்களில் மழை நீர் தேங்கியுள்ளது. இதன் காரணமாக மக்கள் நலன் கருதி மின்சார விநியோகம் நிறுத்தப்பட்டது.  மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக கடந்த இரண்டு நாட்களாக பெய்த கனமழையால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு  மாவட்டங்களில் உள்ள கல்லூரிகள், பள்ளிகள், தனியார் நிறுவனங்கள், வங்கிகள், நிதி நிறுவனங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தது.

மிக்ஜாம் புயல்

தொடர்ந்து மழையினால் ஏற்பட்ட சேதங்களில் நிவாரணப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், மழைநீர் இன்னும் முழுமையாக வடிவடையாததால் இன்றும் சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளைய தினமும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் மழை வெள்ளத்தில் செல்லாமல் வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம் சிறப்புக்கள்

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!

சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!

From around the web