பட்ஜெட் 2024 : அல்வா கிண்டிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்!

 
அல்வா
 


 இந்தியாவில் 2024-25ம்  நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் ஜூலை 23ம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். இதற்கு முன்பாக   அல்வா கிண்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அனைவருக்கும் பரிமாறினார். 
2024-25 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட  இன்னும் ஒரு வாரம் கூட இல்லாத நிலையில், பட்ஜெட் தயாரிப்பின் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதனைக் குறிக்கும் வகையில், நேற்று ஜூலை 16ம் தேதி செவ்வாய்க்கிழமை  நார்த் பிளாக் அடித்தளத்தில் ஹல்வா விழா அனுசரிக்கப்பட்டது. இந்த விழாவில்  மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி, நிதியமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் மற்றும் பட்ஜெட் தொகுப்பில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் கலந்து கொண்டனர்.  இந்நிகழ்வில் நிர்மலா சீதாராமன் அல்வாவை அனைவருக்கும் பரிமாறினார். நாடாளுமன்றத்தில் மத்திய அரசு பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன் ஆண்டுதோறும் இந்த அல்வா கிண்டும் விழா கொண்டாடப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது.  அந்த வகையில் இந்த முறையும் அல்வா கிண்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. 

நிர்மலா பட்ஜெட்
வழக்கமாக, ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 1ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.  இந்த ஆண்டு மக்களவைத் தேர்தலையொட்டி, இடைக்கால பட்ஜெட் கொண்டு தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் அடுத்த வாரம் முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.  இம்முறை காகிதம் இல்லாத (டிஜிட்டல்) பட்ஜெட் தாக்கல் செய்யப்படவிருக்கிறது.
மத்திய பட்ஜெட், வருடாந்திர நிதி அறிக்கை, மானியங்களுக்கான கோரிக்கை, நிதி மசோதா போன்ற அனைத்து ஆவணங்களும் 'யூனியன் பட்ஜெட் மொபைல் செயலியில் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இதற்கிடையில், நிதித்துறை செயலாளர் டி.வி.சோமநாதன், நிதி விவகார செயலாளர் அஜய் சேத் மற்றும் நிதி சேவைகள் செயலாளர் விவேக் ஜோஷி ஆகியோர் அல்வா விழாவில் கலந்து கொண்டனர். 

ஜிஎஸ்டி நிர்மலா

நார்த் பிளாக்கின் அடித்தளத்தில் அமைந்துள்ள அச்சகத்தில் பட்ஜெட் பிரதிகள் அச்சிடப்படுகின்றன. 1980 முதல் 2020 வரை 40 ஆண்டுகளாக இங்கு பட்ஜெட் காகிதங்கள் அச்சிடிக்கப்பட்டன. மோடி அரசு காகிதமில்லாத பட்ஜெட்டைக் கொண்டுவந்தது. ஆரம்பத்தில், பட்ஜெட் பிரதிகள் ராஷ்டிரபதி பவனில் அச்சிடப்பட்டு வந்தன.  தகவல் கசிவு காரணமாக, 1950 முதல்   டெல்லியில்  மின்ட் ரோடு அச்சகத்திற்கு அச்சிடும் பணி மாற்றப்பட்டது. 1980  முதல் நிதியமைச்சகம் அமைந்துள்ள நார்த் பிளாக்கில் அச்சிடப்பட்டது. இந்த பட்ஜெட் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் தொடர்ந்து 2  வாரங்கள் எங்கும் வெளியே செல்லாமல் உள்ளேயே தங்கி இருக்க வேண்டியது அவசியம். மொபைல் போன்கள் எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.  ஒரு சிறை வாசம் போல அவர்கள் அந்த கட்டடத்திலேயே பூட்டி வைக்கப்படுவார்கள். தகவல் கசிவைக் கட்டுப்படுத்தவே இந்த பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்படுகிறது.  2014 முதல்  ரயில்வே பட்ஜெட் மத்திய பட்ஜெட்டில் இணைக்கப்பட்டது. பிப்ரவரி 28ம் தேதிக்கு பதிலாக பிப்ரவரி 1ம் தேதியே பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. கொரோனா காலகட்டத்தில் பட்ஜெட் டிஜிட்டல் மயமாக்கப்பட்டது. அதே நேரத்தில் ஒவ்வொரு வருடமும்  அல்வா விழா தொடர்ந்து நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web