லாரி மீது மோதிய ஆம்புலன்ஸ்.. 3 பேர் உடல் நசுங்கி பலியான சோகம்!
கர்நாடாகாவில் லாரி மீது பயங்கர வேகத்தில் மோதிய ஆம்புலன்ஸால் விபத்து ஏற்பட்டு தமிழகத்தைச் சேர்ந்த 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். சாலையோரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி மீது மோதியதால் இந்த விபத்து நேரிட்டது.
திருநெல்வேலியைச் சேர்ந்தவர் ஆகாஷ் (17). அகமதாபாத்தில் ஆகாஷ் உயிரிழந்த நிலையில், அவரது உடலைத் திருநெல்வேலிக்கு ஆம்புலன்ஸில் கொண்டுச் சென்ர போது இன்று அதிகாலையில் புனே - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் இந்த கோர விபத்து நடந்தது. இந்த விபத்தில் ஆகாஷின் உடலைக் கொண்டுச் சென்ற கனகமணி (72) மற்றும் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் என அனைவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
ஆம்புலன்ஸில் இருந்த மேலும் 2 பேர் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக சித்ரதுர்கா மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார், சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.
லாரி மீது பயங்கர வேகத்தில் மோதியதில், ஆம்புலன்ஸின் முன் பகுதி முழுவதுமாக அப்பளமாக நொறுங்கியது. கரும் சிரமங்களுக்கிடையே ஆம்புலன்ஸில் இருந்து உயிரிழந்தவர்களின் உடலை மீட்ட போலீசார், அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். போலீசாரின் விசாரணையில், உயிரிழந்தவர்கள் கனகமணி, ஆகாஷ் மற்றும் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் என்பது தெரிய வந்தது.
ஆம்புலன்ஸின் எண்ணை விசாரித்ததில், அது ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து வந்த ஆம்புலன்ஸ் என்பதை உறுதி செய்தனர். விபத்து குறித்து சித்ரதுர்கா கிராமிய காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து போலீசார் மேலும் விசாரித்து வருகின்றனர்.
ஒரு புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ