அடுத்த அதிர்ச்சி... விலங்குகளால் பரவும் வைரஸ்!!
கேரளாவில் திருவனந்தபுரத்தில் விலங்குகளால் பரவும் பாக்டீரியா நோயான ப்ரூசெல்லோசிஸ் நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. வெம்பாயம் பகுதியில் வசித்து வரும் தந்தை மற்றும் மகன் இருவருக்கும் இந்த நோய் பாதித்துள்ளது.
அவர் திருவனந்தபுரம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இருவரின் உடல்நிலை திருப்திகரமாக இருப்பதாக கேரள மாநில சுகாதாரத்துறை கூறியுள்ளது.நோய்வாய்ப்பட்ட விலங்குகளுடன் தொடர்பு கொள்வதன் மூலம் ப்ரூசெல்லோசிஸ், நோய்த்தொற்று ஏற்படுவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தலைவலி, மிதமான காய்ச்சல், உணவுப் பொருட்களை விழுங்குவதில் சிரமம், சுவாசத் தசைப்பிடிப்பு, வலிப்பு உட்பட சில அடையாளங்கள் இந்த நோயின் அறிகுறிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன. செல்லப் பிராணிகளை வளர்ப்போர் அவைகளிடமிருந்து சற்று தள்ளியே இருப்பது நல்லது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...