சரக்கும் .. சைட் டிஷ் கோழியும்.. தொண்டர்களை குஷிப்படுத்திய எம்.எல்.ஏ.. கிழித்தெடுக்கும் நெட்டிசன்கள்.. !

 
வாசுபள்ளி கணேஷ் குமார்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தன்னைப் பார்க்க வந்த கட்சியினருக்கு, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ ஒருவர் மதுவுடன் உயிருள்ள கோழியையும் பரிசாக அளித்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் தெற்கு தொகுதி எம்எல்ஏவாக இருப்பவர் வாசுபள்ளி கணேஷ் குமார். இவர் ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர். தமிழகத்தில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டு வரும் நிலையில், ஆந்திராவில் கடந்த 4 நாட்களாக சங்கராந்தி பண்டிகை கொண்டாடப்பட்டது. இந்நிலையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு எம்எல்ஏ வாசுபள்ளி கணேஷ்குமாரை சந்திக்க ஒய்எஸ்ஆர் கட்சியினர் கட்சி அலுவலகத்திற்கு வந்தனர்.

வாசுப்பள்ளி கணேஷ் குமார்

எம்.எல்.ஏ., அவர்களை அன்புடன் வரவேற்று, அனைவருக்கும் பொங்கல் வசூலாக, முழு மது பாட்டில் மற்றும் 2 கிலோ  சிக்கனை அனுப்பி வைத்தார். இந்த இன்ப அதிர்ச்சியால், கட்சி அலுவலகத்தில் இருந்து வெளியே வந்த தொண்டர்கள் அனைவரும் ஒரு கையில் கோழிக்கறியும், மற்றொரு கையில் சரக்குடனும் சிரித்த முகத்துடன் வெளியே வந்தனர். 400க்கும் மேற்பட்ட கட்சியினருக்கு பொங்கல் பரிசு வழங்கி குஷிப்படுத்தியுள்ளார் கணேஷ்குமார்.

மதுவும், கோழியும் வழங்கிய ஆந்திர எம்.எல்.ஏ

ஆந்திராவில் கிராம பஞ்சாயத்து பகுதிகளில் ஒரு நபர் 3 மதுபாட்டில்களுக்கு மேல் வைக்கக்கூடாது என்ற விதி உள்ளது. இந்நிலையில் எம்எல்ஏ 400 மதுபாட்டில்களை எப்படி வைத்திருந்தார் என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இது குறித்து கலால் மற்றும் சுங்க வரித்துறை அதிகாரிகள் இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை என கூறப்படுகிறது. கடந்த ஆயுதபூஜையின் போது 300 பேருக்கு பட டிக்கெட்டுகளை கணேஷ்குமார் வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

அடக்கொடுமையே.. 112 வயசுல 8 வது கல்யாணம்..... மணமகனை வலைவீசி தேடும் பாட்டி... !

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க!

From around the web