ஆகஸ்ட் 23 தேசிய விண்வெளி தினமாக அறிவிப்பு!!
உலகிலேயே முதன் முறையாக நிலவை ஆராய்ச்சி செய்ய இஸ்ரோ சந்திரயான் 3 ஐ நிலவுக்கு வெற்றிகரமாக அனுப்பியுள்ளது. இதற்காக உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் இஸ்ரோவுக்கு குவிந்து வருகின்றன. இத்திட்டம் வெற்றியடைந்ததை தொடர்ந்து, இஸ்ரோ விஞ்ஞானிகளை பாராட்டும் வகையில் மோடி இன்று பெங்களூருவுக்கு வருகை தந்தார்.
modi in isro.. pic.twitter.com/wDLAvaBmCy
— Dina Maalai (@DinaMaalai) August 26, 2023
மோடி விஞ்ஞானிகளை பாராட்டி அவர்கள் மத்தியில் உரையாற்றினார். அதில் "நீங்கள் தேசத்தை அழைத்துச் சென்ற உயரம் மிகச் சாதாரணமானது அல்ல. இந்தியா நிலவில் கால் வைத்துள்ளது. நம் நாட்டின் கௌரவத்தை நிலவில் நாம் நிலைநாட்டியுள்ளோம். விண்வெளி துறையின் சாதனைகள், பங்களிப்புகள் இளைஞர்களுக்கு உந்துசக்தியாக விளங்குகின்றன.
நிலவில் விக்ரம் லேண்டர் இறங்கிய இடம் சிவசக்தி என்ற பெயரில் அழைக்கப்படும். இமயம் முதல் கன்னியாகுமரி வரை இந்தியர்களை இணைக்கின்ற பெயராக இருக்கும். சந்திரயான் 3 திட்டத்தில் பெண்களின் பங்களிப்பும் முக்கியமாக உள்ளது.
modi in isro pic.twitter.com/wghUpUx3A2
— Dina Maalai (@DinaMaalai) August 26, 2023
அதனால் தான் சிவசக்தி என்ற பெயர் அவர்களின் அர்ப்பணிப்பிற்கும் ஒரு சாட்சி. 2019ல் சந்திரயான்2 நிலவில் தனது இடத்தை பதித்த இடம் திரங்கா மூவர்ணக்கொடி என அழைக்கப்படும். தோல்வி நிரந்தரமானது அல்ல என்பதை நினைவூட்டவே திரங்கா என பெயர் சூட்டப்படுகிறது. சந்திரயான் 3 லேண்டர் நிலவில் கால்பதித்த ஆகஸ்ட் 23ம் தேதி இனி ஆண்டுதோறும் தேசிய விண்வெளி நாளாக கொண்டாடப்படும். இதன் அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 23ம் தேதி விஞ்ஞானம், அறிவியல், விண்வெளி ஆராய்ச்சி இவைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்" என தெரிவித்துள்ளார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!