ஜூலை 27 முதல் முதுகலை மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

தமிழகம் முழுவதும் அரசு கல்லூரிகளில் இளநிலை பட்டப்படிப்புக்கான மாணவர் சேர்க்கை முடிவடைந்துள்ளது. இந்நிலையில் தற்போது முதுகலை மாணவர் சேர்க்கைக்கு ஜூலை 27 முதல் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சுமார் 1,6,477 இளங்கலை பட்டப்படிப்பு இடங்கள் உள்ளன.
நடப்பு கல்வியாண்டில் 85237 பேருக்கு மாணவர் சேர்க்கை நடந்துள்ளது. மீதமுள்ள இடங்களுக்கான மாணவர் சேர்க்கை தற்போது நடைபெற்று வருகிறது. அதனைப் போலவே முதுகலை பட்டப்படிப்பு மாணவர் சேர்க்கை விண்ணப்ப பதிவு ஜூலை 27ம் தொடங்கி அடுத்த மாதம் ஆகஸ்டு 7ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 28ம் தேதி முதுகலை மாணவர்களுக்கு முதல் வகுப்புகள் தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா