ஆம்ஸ்ட்ராங் படுகொலை.. 16ஆம் நாள் காரியத்தில் நிகழப்போகும் மற்றொரு கொலை.. உளவுத்துறை எச்சரிக்கை!

தமிழ்நாடு பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், கொலையாளிகளின் நெருங்கிய உறவினர்கள் சிலர் கொல்லப்படலாம் என உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளதையடுத்து, போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங், சென்னை பெரம்பூர் வேணுகோபாலப் பெருமாள் தெருவில் அவர் கட்டிக் கொண்டிருந்த வீட்டின் அருகே ஜூலை 5ஆம் தேதி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
போலீசார் தனிப்படை அமைத்து ஆம்ஸ்ட்ராங் கொலையாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு உள்பட 11 பேர் கைது செய்யப்பட்டனர்.இதில், ஆம்ஸ்ட்ராங்கைக் கொல்லப் பயன்படுத்திய ஆயுதங்களைக் காட்டச் சென்ற இடத்தில் போலீஸாரை தாக்கிவிட்டு ரவுடி திருவேங்கடம் தப்பிச் செல்ல முயன்றான். அப்போது போலீசார் அவரை சுட்டுக்கொன்றனர். இந்த நிலையில் இந்த கொலை தொடர்பாக அடுத்தடுத்து கைதுகள் நடந்து வருகின்றன.
திமுக நிர்வாகியின் மகன் சதீஷ், அதிமுக நிர்வாகி மலர்க்கொடி, உதவியாளர் ஹரிஹரன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கிடையில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பாஜகவின் அஞ்சலைக்கும் தொடர்பு இருப்பதாக போலீசார் சந்தேகிக்கின்றனர். தலைமறைவான அஞ்சலையை பிடிக்க போலீசார் தீவிரமாக நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், நாளை ஆம்ஸ்ட்ராங்கின் 16வது நாள் காரியம் நடக்க உள்ளது. ஆம்ஸ்ட்ராங் கொல்லப்பட்ட நேரத்தில் அவரது 16வது நாளில், ஆம்ஸ்ட்ராங்கின் ஆதரவாளர்கள் பழிவாங்கும் வகையில் சம்பந்தப்பட்டவர்களை எப்படியும் கொன்றுவிடுவோம் என்று சபதம் செய்தனர்.இந்நிலையில் நாளை 16ம் தேதி. எனவே நாளை ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பழிவாங்கும் வாய்ப்பு இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து சென்னையில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
ரவுடிகளை ஒடுக்குவதே நோக்கம் என சென்னை கமிஷனர் அருண் கூறியுள்ள நிலையில், ரவுடிகளின் நடமாட்டம் உன்னிப்பாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு காரணம் ஆற்காடு சுரேஷ் கொலைக்கு பழிவாங்கும் செயல் என்றால், அவரது உறவினர்களுக்கு பாதுகாப்பு அளிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர். இன்று முதல் ரோந்து பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா