பகீர்... வீரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய ராணுவ அதிகாரி.. 3வீரர்கள் பலி... 5 பேர் படுகாயம்!!

 
ராணுவம்

இந்திய எல்லைகளில் ராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டு தொடர் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில் ஜம்மு காஷ்மீரின் ரஜௌரி மாவட்டத்தில் இந்திய ராணுவ முகாம் ஒன்று செயல்பட்டு வருகிறது.  . நேற்று காலையில் வழக்கம் போல் இந்த முகாமில் ராணுவ வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது ராணுவத்தின் முக்கிய பணியில் இருக்கும் அதிகாரி ஒருவர், திடீரென துப்பாக்கியை எடுத்து சரமாரியாக சுட ஆரம்பித்தார்.

ராணுவம்

இதனால் சக வீரர்கள் அதிர்ச்சி அடைந்து அங்குமிங்கும் ஓடத் தொடங்கினர். அதே நேரத்தில் அவர்  கையெறி குண்டுகளையும் தூக்கி வீச ஆரம்பித்தார். இந்த கோர தாக்குதலில்  உயர் அதிகாரிகள் 3 பேரும், ராணுவ வீரர்கள் 5 பேரும் படுகாயம் அடைந்தனர்.சிறிது நேரம் கழித்து  அந்த அதிகாரி சரணடைந்தார்.  

ராணுவம்


இது குறித்து ராணுவ அதிகாரி ”  துப்பாக்கி சுடுதல் பயிற்சியின் போது அதிகாரி ஒருவர் திடீரென சக வீரர்கள் மீது கையெறி குண்டுகளை வீசியும், துப்பாக்கியால் சுட்டும் தாக்க ஆரம்பித்தார். இதனை கண்ட சக அதிகாரிகள் ஒருவழியாக அவரை சரணடைய செய்தார்கள். தொடர்ந்து  8 மணி நேரம் நீடித்த இந்த பதற்றமான சூழ்நிலை குறித்து   மேலதிக விசாரணை நடைபெற்று வருகிறது.” எனத் தெரிவித்துள்ளார். 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

From around the web