பாகிஸ்தான் விமானப்படை தாக்குதலில் அப்பாவி மக்கள் 30 பேர் உயிரிழப்பு... சொந்த நாட்டின் மீது 8 குண்டுகளை வீசிய பாகிஸ்தான்?!

 
பாகிஸ்தான்

பாகிஸ்​தானின் கைபர் பக்​துன்​கவா மாகாணத்​தில் உள்ள ஒரு கிராமத்​தின் மீது அந்​நாட்டு விமானப் படை நடத்​திய தாக்​குதலில் பெண்கள் உட்பட அப்​பாவி மக்​கள் 30 பேர் உயி​ரிழந்​தனர்.

பாகிஸ்​தானின் கைபர் பக்​துன்​கவா மாகாணத்​தில் தீவிர​வாத எதிர்ப்பு நடவடிக்​கை​யின் பெயரில் அந்​நாட்டு ராணுவம் தாக்​குதல் நடத்தி வரு​கிறது. இதில் அப்பாவி மக்​கள் பலர் கொல்​லப்​படு​வ​தாக தொடர்ந்து புகார் கூறப்​படு​கிறது. இந்​நிலை​யில் திரா பள்​ளத்​தாக்​கில் உள்ள மாட்ரே தாரா கிராமத்​தில் நேற்று அதி​காலை பாகிஸ்​தான் போர் விமானங்​கள் திடீரென அடுத்தடுத்து 8 குண்​டு​களை வீசி தாக்​குதல் நடத்​தின.

பாகிஸ்தான்

இந்த தாக்குதலில் பெண்​கள், குழந்​தைகள் உட்பட அப்​பாவி மக்​கள் 30 பேர் உயி​ரிழந்​தனர். பலர் காயம் அடைந்​தனர். அங்கு கட்​டிட இடி​பாடு​களை அகற்​றும் பணி தொடர்​கிறது. இதில் உயி​ரிழந்​தோர் எண்​ணிக்கை மேலும் அதி​கரிக்​கலாம் என அஞ்​சப்​படு​கிறது.

சொந்த நாட்டின் மீதே பாகிஸ்தான் விமானப்படை குண்டு வீசி நடத்திய இந்த தாக்​குதலுக்கு அந்​தப் பிராந்​தி​யம் முழு​வதும் கடும் எதிர்ப்பு கிளம்​பி​யுள்​ளது. கைபர் பக்​துன்​கவா மாகாணத்​தில் மேற்​கொள்​ளப்​படும் இந்த தாக்​குதல்​களில் பொது​மக்​களின் உயிர் மற்​றும் உடைமை​கள் குறித்து ராணுவம் அலட்​சி​யம் செய்​வ​தாக ஆம்​னெஸ்டி இன்​டெர்​நேஷனல் அமைப்பு குற்​றம் சாட்​டி​யுள்​ளது.

பாகிஸ்தான்

இது குறித்து கைபர் பக்​துன்​கவா போலீசாஸார் கூறுகை​யில், 'இந்த மாகாணத்​தில் இந்த ஆண்டு ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை 605 தீவிர​வாத சம்​பவங்​கள் நடந்​துள்​ளன. இதில் பொது​மக்​கள் 138 பேரும் 79 போலீ​ஸாரும் உயி​ரிழந்​துள்​ளனர். ஆகஸ்ட் மாதத்​தில் மட்​டும் 129 சம்​பவங்​களில் பாது​காப்பு படை​யினர் உள்​ளிட்ட பலர் இறந்​துள்​ளனர்'' என்று தெரி​வித்​தனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?