செப்.21 இலங்கையில் அதிபர் தேர்தல்... ஆகஸ்ட் 15ல் வேட்புமனு துவக்கம்!
உலகில் பெரும்பான்மையான நாடுகள் பிரதமர் ஆட்சி முறையைக் கொண்டிருந்தாலும், இலங்கையில் அதிபர் ஆட்சி முறையே பின்பற்றப்பட்டு வருகின்றது. இலங்கை மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அதிபர் ஐந்து ஆண்டுகள் பதவி வகித்தல் வேண்டும். ஒருவர் இரண்டு முறை மட்டுமே அதிபர் பதவி வகிக்க முடியும். மூன்றாவது முறையாக இலங்கை அரசியல் அமைப்புச் சட்டத்தின்படி, அதிபராக பதவி வகிக்க முடியாது. மேலும், அதிபர் அரசின் தலைவராகவும், நிறைவேற்று அதிகாரம் கொண்டவராகவும், முப்படைகளின் தலைவராகவும் இருப்பார்.

இலங்கையில் 1978ம் ஆண்டு அதிபர் ஆட்சிமுறை அறிமுகப்படுத்தப்பட்டு முதல் அதிபராக ஜே.ஆர்.ஜெயவர்தன 1982-ம் ஆண்டு தேர்வு செய்யப்பட்டார். 1988-ம் ஆண்டு ரணசிங்க பிரேமதாசவும், 1994 மற்றும் 1999-ம் ஆண்டுகளில் சந்திரிகா குமாரதுங்கவும், 2005 மற்றும் 2010 ஆண்டுகளில் மகிந்த ராஜபக்சவும், 2015-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் மைத்ரிபால சிறிசேனாவும் அதிபராக தேர்ந்தெடுக்ப்பட்டனர். 2019-ம் ஆண்டு நவம்பர் மாதம் இலங்கையின் 8வது அதிபராக கோத்தபய ராஜபக்ச வெற்றி பெற்றார்.
இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் அதிபர் கோத்தபய ராஜபக்சே தனது பதவியை ராஜினாமா செய்ததையடுத்து 22.07.2022 அன்று இலங்கை நாடாளுமன்றத்தில் ரகசிய வாக்கெடுப்பு மூலம் புதிய இடைக்கால அதிபராக ரணில் விக்ரமசிங்க தேர்வு செய்யப்பட்டார்.
அதிபர் ரணில் விக்ரம சிங்கேவின் பதவிக்காலம் நவம்பர் மாதத்துடன் நிறைவடைவதால், செப்டம்பர் 21ம் தேதி அதிபர் தேர்தல் நடத்தப்படும், என இலங்கை தேர்தல் ஆணையம் இன்று ஜூலை 26ம் தேதி அறிவித்துள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் ஆகஸ்ட் 15ம் தேதி துவங்க உள்ளது.

அதிபர் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கே மீண்டும் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ள நிலையில், எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க, நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்சே, முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேகா ஆகியோரும் அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கு தீவிரம் காட்டி வருகின்றனர்.
ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா
