அதிர்ச்சி... லாரி மோதி தூக்கிவீசப்பட்ட ஆட்டோ... கல்லூரி மாணவர் துடிதுடித்து பலி!!
ஆந்திர மாநிலம் சத்யவேட்டையில் வசித்து வருபவர் முரளி. இவர் அதே பகுதியில் ஷேர் ஆட்டோ ஓட்டி வருகிறார். இவரது மகன் திலீப் குமார் . இவர் தடாவில் உள்ள தனியார் தொழிற்பயிற்சி கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். கும்மிடிப்பூண்டியை அடுத்துள்ள பொம்மாஜிகுளத்தில் இருந்து முரளி தனது மகன் திலீப் குமாரை அழைத்துக் கொண்டு ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, பொம்மாஜிகுளம் போலீஸ் சோதனை சாவடி அருகே சாலையோரம் ஆட்டோவை நிறுத்தி விட்டு முரளி, சிறுநீர் கழிக்கச் சென்றுள்ளார். அந்த சமயத்தில் ஆட்டோவில் மகன் திலீப் குமார் மட்டும் தனியே இருந்தார். அந்த பக்கமாக சென்ற கண்டெய்னர் லாரி ஒன்று, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து ஆட்டோ மீது மோதியது.
இதில் ஆட்டோ தூக்கி வீசப்பட்டு அருகே இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விழுந்தது. தந்தை கண்ணெதிரிலேயே படுகாயம் அடைந்த மகன் திலீப் குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!