அக்டோபர் 1 முதல் செல்போன், கேமிரா கொண்டு செல்ல தடை!!
முருகப்பெருமானின் 3 வது படை வீடான திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி. இந்தக் கோவிலின் கருவறையை போட்டோ மற்றும் வீடியோக்களில் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது இதனை தடுப்பதற்காக மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு குறித்த விசாரணையில் பழனி கோவிலில் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் கோவில் நிர்வாகம் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அதன்படி, பழனிமலை மீது அக்டோபர் 1ம் தேதி முதல் மொபைல் போன் கொண்டு செல்ல தடை அமல்படுத்தப்படும்.
எனவே பக்தர்கள் கைபேசி மற்றும் புகைப்படங்கள் எடுக்கும் வீடியோ, சாதனங்களை கோவிலுக்கு கொண்டு வருவதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அப்படி கொண்டு வரும் பக்தர்கள் தங்களது கைபேசி மற்றும் புகைப்படம், வீடியோ எடுக்கும் சாதனங்களை கோவில் நுழைவாயிலில் பாதுகாப்பு மையங்களில் ஒரு கைபேசிக்கு ரூ5 கட்டணம் செலுத்தி ஒப்படைத்து விட்டு செல்ல வேண்டும். பின்னர் தரிசனம் பெற்றுச் செல்ல ஏற்பாடு செய்துள்ளதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...