பவதாரிணி நாளை சொந்த ஊரில் இறுதிச் சடங்கு... !

 
பவதாரிணி

இளையராஜாவின் மகளும், பிரபல பிண்ணனி பாடகியுமான பவதாரணி கல்லீரல் புற்றுநோய் காரணமாக இலங்கையில் நேற்று உயிரிழந்தார். அவருக்கு வயது 47. இவருக்கு குழந்தைகள் கிடையாது. இந்நிலையில் இலங்கையில்  இருந்து அவரது உடல் விமானத்தில் கார்கோ மூலம் சென்னை எடுத்து வரப்பட்டது. பவதாரிணியின் உடலை அவரது சகோதரர் கார்த்திக் ராஜா, யுவன்சங்கர் ராஜா மற்றும் நடிகர் சுப்பு பஞ்சு அருணாச்சலம்   சென்னை விமான நிலைய கார்கோ பிரிவிற்கு வந்து பெற்றுக் கொண்டனர்.

பவதாரணி

அங்கிருந்து , தி நகரில் உள்ள இளையராஜா வீட்டிற்கு கொண்டு சென்றனர். அங்கு அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.இன்று இரவு 10  மணி வரை சென்னையில் திரைப்பிரபலங்கள் , பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படும்.  பவதாரணியின் உடல்  அதன் பின் இசைஞானி இளையராஜாவின் சொந்த ஊரான பண்ணைப்புரம் கொண்டு செல்லப்பட்டு  அங்கு உறவினர்கள் அஞ்சலி செலுத்த உள்ளனர்.

பவதாரணி


அதன் பின் பவதாரிணியின் கணவரது ஊரான லோயர் கேமில்  அவரது இறுதி சடங்குகள் செய்யப்படும் எனத்  தகவல்கள் வெளியாகியுள்ளது. இளையராஜாவின் தி.நகர் இல்லத்தில் அரசியல் பிரபலங்கள் முதல், சினிமா பிரபலங்கள் என பலரும் பவதாரிணி உடலுக்கு அஞ்சலி செலுத்தி  வருகின்றனர். இதனால், அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க

From around the web