18 லட்சம் கட்டியும் வட்டி கேட்டு மிரட்டிய கொடூரம்.. பியூட்டி பார்லர் ஓனர் எடுத்த விபரீத முடிவு..!

 
பாஸ்கரன்

திருவாரூர் அருகே உள்ள ஆண்டாங்கரை பகுதியை சேர்ந்தவர்கள் பாஸ்கரன் - பானுமதி தம்பதி. இவர்களுக்கு பாக்யலட்சுமி (22) என்ற மகளும், விஷ்வா (19) என்ற மகனும் உள்ளனர். பாஸ்கர், பெரிய அளவில் பியூட்டி பார்லர் நடத்தி வரும் நிலையில், தொழிலில் முதலீடு செய்வதற்காக வட்டிக்கு பணம் எடுத்து கட்டி வந்துள்ளார். ஆனால், அவரால் அசல் தொகையை செலுத்த முடியவில்லை.

பூச்சி மருத்து குடித்தவா் உயிரிழப்பு- Dinamani

இந்நிலையில், கடன் கொடுத்தவர்கள் அவர் கட்டிய தொகையை வட்டியுடன் மட்டுமே வரவு வைத்து வந்துள்ளனர். 18 லட்சம் வரை வட்டியே கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. அதன்பிறகு, அசல் தொகையை விரைவாக செலுத்துமாறு கடன் கொடுத்தவர்கள் மிரட்டியுள்ளனர். இதனால் பயந்துபோன பாஸ்கர் கடந்த 7ம் தேதி விஷம் குடித்தார். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி பாஸ்கர் இன்று உயிரிழந்தார். இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ்பிக்கு அவர் எழுதிய கடிதத்தை போலீஸார் கைப்பற்றினர். அந்த கடிதத்தில், “திருவாரூர் ரயில்வே காலனி கோவிந்தராஜ் மற்றும் அவரது மகன் இனியன் ஆகியோரிடம் வட்டிக்கு கடன் வாங்கி 6 ஆண்டுகள் ஆகிறது. அதற்கு 18 லட்சம் வட்டி மட்டுமே செலுத்தியுள்ளேன். கந்துவட்டி, மீட்டர் வட்டி என ரூ.12 லட்சம் கேட்டு என்னையும், எனது மகனையும் கொலை செய்து விடுவதாக மிரட்டுகின்றனர்.

Baskaran family

வட்டி கட்ட முடியாமல் போனதால் வேறு வழியின்றி உயிரை துறந்தேன். இதற்கெல்லாம் காரணம் கோவிந்தராஜ் மற்றும் அவரது மகன். எனது மரணத்திற்குப் பிறகு எனது குடும்ப உறுப்பினர்களைப் பாதுகாக்குமாறு கேட்டுக்கொள்கிறேன், ”என்று அவர் எழுதினார்.

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க

From around the web