தென் மாவட்டங்கள் செல்பவர்களே உஷார்... போக்குவரத்து மாற்றம்!
ஆயுத பூஜை விஜய தசமி தொடர் விடுமுறையை செங்கல்பட்டு மாவட்டத்தில் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் புக்கத்துறை மற்றும் படாளம் சாலை சந்திப்புகளில் மேம்பால கட்டுமானம் மற்றும் சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகின்றன. தசரா மற்றும் ஆயுத பூஜை பண்டிகைக்கு (30.09.2025 to 01.10.2025) தொடர்விடுமுறையில் செல்வோர் போக்குவரத்து நெரிசலை சந்திக்க நேரிடும் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்கு பயணிக்கும் போது தாமதங்களை தவிர்க்க ECR, GWT சாலை வழியாக செல்லும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு மற்றும் சென்னையின தென் பகுதிகளில் இருந்து வரும் வாகன ஓட்டிகள் படாளம் மற்றும் புக்கத்துறை மேம்பால பணி நடைபெறும் பகுதிகளை தவிர்க்க செங்கல்பட்டு திருக்கழுக்குன்றம் மேலவளம்பேட்டை வழியாக மீண்டும் GST சாலையை அடைந்து செல்ல கேட்டுக்கொள்ளப்படுகிறது.
சென்னையில் இருந்து தென் மாவட்டங்களை நோக்கி செல்லும் கனரக வாகனங்கள் செங்கல்பட்டு திருமுக்கூடல் வந்தவாசி காஞ்சிபுரம் பை வழியாக நெல்வாய் X ரோடு உத்திரமேரூர் திண்டிவனம் வழியாக செல்லலாம்.

2. சென்னையிலிருந்து மேற்கு மாவட்டங்களை நோக்கி செல்லும் கனாக வாகனங்கள் GWT சாலை வழியாக செல்லும்படி அறிவுறுத்தப்படுகிறது.
3. மேலும், சென்னை, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் இருந்து செங்கல்பட்டு மார்க்கமாக வரும் கனரக வாகனங்கள் GST சாலையில் 30.09.2025 மதியம் 02.00 மணி முதல் 01.10.2025 காலை 03.00 மணி வரை இயங்க அனுமதிக்கப்படமாட்டாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
