பெரும் பரபரப்பு.. விடுதியில் சாப்பிட்ட 137 கல்லூரி மாணவிகளுக்கு மயக்கம் !!

 
விடுதி சாப்பாடு

விடுதியில் வழங்கிய உணவை சாப்பிட்ட மாணவிகளில் பலருக்கு திடீரென்று வாந்தி, மயக்கம், தலைசுற்று, வயிற்று வலி ஏற்பட்டதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு சக்திநகரில் சிட்டி நர்சிங் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் கர்நாடகா மட்டுமின்ற வெளி மாநிலத்தை சேர்ந்த ஏராளமான மாணவிகளும் படித்து வருகின்றனர். இந்த மாணவிகள் தங்குவதற்காக கல்லூரியில் விடுதி உள்ளது. 

விடுதி

இந்த விடுதியில் தங்கியிருக்கும் மாணவிகளுக்கு தினமும் 3 வேளை உணவு வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி நேற்றிரவு வழக்கம் போல உணவு வழங்கப்பட்டது. அந்த உணவை சாப்பிட்ட மாணவிகளில் பலருக்கு திடீரென்று வாந்தி, மயக்கம், தலைசுற்று, வயிற்று வலி ஏற்பட்டது. இதனால் பாதிக்கப்பட்ட மாணவிகள் அனைவரும் வலியால் துடித்தனர். சிலர் வலியை பொறுத்துக்கொள்ள முடியாமல் கூச்சலிட்டு கதறினர். 

இதனை அறிந்த கல்லூரி மற்றும் விடுதி நிர்வாகத்தினர், உடனடியாக வாகனங்களை ஏற்பாடு செய்து அவர்களை மீட்டு மங்களூருவில் உள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மொத்தம் 137 மாணவிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

விடுதி

இதனிடையே, பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோர்கள் மருத்துவமனைகள் முன்பாக குவிந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதனால் அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த தொழில் அதிக லாபம் தரும்

 

From around the web