இந்தியா அபார வெற்றி!! ரசிகர்கள் உற்சாகம்!!

 
இந்தியா நேபாளம்

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பான இந்தியா பாகிஸ்தான் ஆட்டத்தில் மழை தான் வெற்றி பெற்று இரு நாடுகளையும் காப்பாற்றியது. இந்த  தொடரில் நேற்றைய போட்டியில் இந்தியா மற்றும் நேபாளம் அணிகள் மோதின.  டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
 குஷால் புர்டெல் மற்றும் ஆசிப் ஷேக்  ஜோடி அணிக்கு நல்ல தொடக்கம் கொடுத்தது.  அடுத்த வந்த பீம் ஷர்கி, ரோஹித் குமார் பவுடல், குஷால் மல்லா ஆகியோர் முறையே 7, 5 மற்றும் 2 ரன்களில் ஆட்டம் இழந்தனர்.

இந்தியா நேபாளம்

அடுத்து  வந்த குல்ஷன் குமார் ஜா மற்றும் திபேந்திர சிங் ஐரி முறையே 23 மற்றும் 29 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.  போட்டி முடிவில் நேபாளம் அணி 230 ரன்களை குவித்து 48.2 ஓவர்களில் ஆல் அவுட் ஆனது. இதில்  ஜடேஜா பத்து ஓவர்களில் 40 ரன்களை மட்டுமே கொடுத்து 3 விக்கெட்களையும்,   முகமது சிராஜ் 3 விக்கெட்களையும் வீழ்த்தினர்.  ஹர்திக் பான்டியா, ஷர்துல் தாக்கூர் மற்றும் முகமது ஷமி தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர். 231 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன்   களமிறங்கிய இந்திய அணி  ஷுப்மான் கில் கேப்டன் ரோகித் சர்மா இணை ஆட்டத்தை தொடங்கியது. இந்திய அணி 2.1 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 17 ரன்கள் எடுத்த போது மழை குறுக்கிட்டது.  இந்திய அணி 23 ஓவர்களில் 145 ரன்கள் எடுக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

இந்தியா நேபாளம்

ரோகித் சர்மா மற்றும் ஷுப்மான் கில் இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.  20.1 ஓவர்களில் இலக்கை கடந்து 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ரோகித் 74 ரன்களும், கில் 67 ரன்களும் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியுள்ளது. இதனால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web