பீகார் முதல்-மந்திரி, பிரதமர் பதவிகள் காலியாக இல்லை... அமித்ஷா ’நச்’!
பீகார் சட்டசபை தேர்தலை முன்னிட்டு, மாநிலம் முழுவதும் அரசியல் சூழல் சூடுபிடித்துள்ளது. 243 தொகுதிகளைக் கொண்ட பீகார் சட்டசபைக்கான தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 121 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு அடுத்த மாதம் 6ஆம் தேதியும், இரண்டாம் கட்டமாக 122 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு அடுத்த மாதம் 11ஆம் தேதியும் நடைபெறும். வாக்குகள் எண்ணிக்கை மற்றும் முடிவுகள் அடுத்த மாதம் 14ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளன.

இந்த நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பீகாரின் பல்வேறு பகுதிகளில் தீவிர தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டு வருகிறார். இன்று தர்பங்கா பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், “பீகாரில் லாலு பிரசாத் யாதவ் தனது மகன் தேஜஸ்வியை முதல்-மந்திரியாக்க விரும்புகிறார். அதேபோல் சோனியா காந்தி தனது மகன் ராகுல் காந்தியை பிரதமராக பார்க்க விரும்புகிறார். ஆனால் அந்த இரண்டு பதவிகளும் தற்போது காலியாக இல்லை,” எனக் கூறினார்.

அவர் மேலும் கூறியதாவது, “லாலு பிரசாத் யாதவ் மாட்டுத் தீவன ஊழல் மற்றும் வேலைக்கு நிலம் வழங்கும் மோசடிகளில் ஈடுபட்டவர். அதேபோல் காங்கிரஸ் கட்சி ரூ.12 லட்சம் கோடி மதிப்புள்ள ஊழல் வழக்குகளில் சிக்கியுள்ளது. பி.எப்.ஐ. அமைப்பை தடை செய்து அதன் உறுப்பினர்களை மத்திய அரசு கைது செய்துள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அவர்களை சிறையில் இருந்து விடுவிக்காது. ஆனால் ராஷ்டிரிய ஜனதா தளம் ஆட்சிக்கு வந்தால் அவர்கள் பி.எப்.ஐ. உறுப்பினர்களை சிறையில் வைத்திருப்பார்களா?” என கேள்வி எழுப்பினார். மேலும் மிதிலா நகரில் சீதா தேவிக்காக கோவில் கட்டப்பட்டு வருவதாகவும், ‘மைதிலி’ மொழிக்கு அதிகாரப்பூர்வ அந்தஸ்து வழங்கியதோடு அரசியலமைப்புச் சட்டம் அதே மொழியில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளதாகவும் அமித்ஷா தெரிவித்தார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!
