பெற்ற தாயே மகனை அடித்து கொலை!! பயங்கரம்..!!

 
பூவரசன்

திருவள்ளூர் மாவட்டம் மதுரவாயல் அடுத்துள்ள புளியம்பேடு பகுதியில் வசித்து வருபவர்   டிரைவர் அரி. இவரது மனைவி செல்வி  . இவர்களது மகன் பூவரசன் . இவர், ராமாபுரத்தில் உள்ள தனியார் சாப்ட்வேர் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். அரி வேலைக்கு சென்றிருந்த சமயத்தில்  வீட்டில் தனியாக இருந்த தாய், மகன் இருவரும் தலையில் இரும்பு கம்பியால் தாக்கப்பட்டு ரத்த காயத்துடன் மயங்கி கிடந்தனர்.


இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த  காவல்துறையினர் இருவரையும் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பூவரசன் பரிதாபமாக உயிரிழந்தார். செல்வி தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து மதுரவாயல் போலீசார் வழக்குப் பதிவு செய்து  விசாரணை நடத்தினர்.   கடுமையான மன அழுத்தத்தில் இருந்த செல்வியே தனது மகன் பூவரசனை இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்துள்ளார். அத்துடன்  தன்னைத்தானே இரும்பு கம்பியால் தாக்கிக் கொண்டது தெரியவந்தது.

 இரும்பு தடி
 
செல்வி கடந்த சில மாதங்களாக மிகுந்த மன அழுத்தத்தில் இருந்து வந்தார். இதற்காக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. கடந்த 10 நாட்களாக இரவில் தூங்காமல் இருந்து வந்ததாகவும், இதற்காக தினமும் தூக்க மாத்திரை சாப்பிட்டு வந்ததாகவும் தெரிகிறது. சம்பவத்தன்றுதான் செல்வியை சொந்த ஊருக்கு அழைத்துச் சென்று மருத்துவம் பார்க்க முடிவு செய்திருந்தனர்.அதற்கான பணிகளை பூவரசன் செய்திருந்தார். ஆனால் அரி இரவு வேலைக்கு சென்றுவிட்டார். அப்போது தூக்கம் வராமல் அதிக மன அழுத்தத்தில் இருந்த செல்வி, அருகில் தூங்கி கொண்டிருந்த மகன் பூவரசனை இரும்பு கம்பியால் தாக்கியதுடன், தன்னை தானே தலையில் தாக்கி மயங்கி விழுந்துள்ளது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

போலீஸ்

முன்னதாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செல்வியிடம், போலீசார் விசாரித்தபோது, “எனது மகனை நான்தான் இரும்பு கம்பியால் தாக்கினேன்” என்றார். அப்படியானால் உங்களை தாக்கியது யார்? என கேட்டபோது அவர் பதில் கூறவில்லை. இதனால் அவர் கூறியதை போலீசார் நம்பவில்லை. ஆனால் வெளியாட்கள் யாராவது அந்த நேரத்தில் அவர்களது வீட்டுக்கு வந்து சென்றார்களா? என கண்காணிப்பு கேமரா காட்சிகளை பார்த்தபோது அப்படி யாரும் வந்து சென்றதாக தெரியவில்லை.மேலும் தீவிர விசாரணை நடத்திய பிறகுதான் செல்வியே அவருடைய மகனை இரும்பு கம்பியால் அடித்துக்கொன்றது உறுதியானதாக போலீசார் தெரிவித்தனர். செல்விக்கு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் மீது கொலை வழக்குப் பதிவு செய்து கைது செய்ய போலீசார் முடிவு செய்துள்ளனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web