பெற்ற தாயே 11 மாத குழந்தையை கழுத்தை நெரித்து கொலை செய்த கொடூரம்!
கேரள மாநிலம் கோட்டயம் மாவேலிக்கரா பகுதியில் வசித்து வருபவர் அஜ்மல். இவரும் அதே பகுதியில் வசித்து வரும் ஷில்பாவும் 2 ஆண்டுகளாக லிவிங் டு கெதரில் இருந்து வருகின்றனர். இதனால் இவர்களுக்கு 11 மாதத்தில் ஷிகன்யா என்ற பெண் குழந்தையும் உண்டு. இந்நிலையில் இருவருக்கும் இடையே தொடர்ந்து கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில் சில மாதங்களாக தனித்தனியாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். சனிக்கிழமை அஜ்மலை தொடர்பு கொண்டு ஷில்பா, குழந்தை உடல்நலக்குறைவால் உயிரிழந்துவிட்டதாக கூறினார். அஜ்மல் இதனை நம்பாமல் குழந்தையுடன் தன்னை வந்து சந்திக்கும்படி ஷில்பாவிடம் தெரிவித்துள்ளார்.
ஷில்பா அஜ்மல் நடத்தி வரும் தேநீர் கடைக்கு காரில் வந்துள்ளார். அப்போது காரில் இருந்து மர்ம நபர் ஒருவர் இறங்கி ஓடியதாக கூறுகின்றனர். சந்தேகம் அடைந்த அஜ்மல், காரில் பின்பக்கம் கிடத்தப்பட்டிருந்த குழந்தையை பார்த்தபோது, குழந்தை உயிரிழந்த நிலையில் கிடந்தது. சந்தேகம் அடைந்த அஜ்மல் காவல்துறையினருக்கு தகவல் அளித்தார். போலீஸார் குழந்தையுடன் தம்பதிகளை அரசு மருத்துவமனைக்கு வருமாறு அறிவுறுத்தினர். இதன்படி அரசு மருத்துவமனைக்கு குழந்தையை கொண்டு சென்ற போது குழந்தை இறந்து நீண்ட நேரம் ஆகி இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். குழந்தையின் உடலில் சந்தேகத்திற்கிடமான காயங்கள் எதுவும் இல்லை. குழந்தையின் பிரேத பரிசோதனை அறிக்கையில், கழுத்தை நெரித்து குழந்தையை கொலை செய்தது உறுதி செய்யப்பட்டது. இதன்பேரில் போலீசார் ஷில்பாவை கைது செய்து, தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
அந்த விசாரணையில் ஷில்பா திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டுள்ளார். அதில் தனது பணிக்கு இடையூறாக இருந்து வந்ததால், குழந்தையை கொலை செய்ததாக ஷில்பா ஒப்புக்கொண்டார். அஜ்மல் உடன் கருத்து வேறுபாடு ஏற்பட்ட பிறகு மற்றொருவருடன் காதலில் இருந்து வந்தார். குழந்தை அதற்கு இடையூறாக இருந்ததால் குழந்தையை கொலை செய்தாரா என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஷில்பாவிடம் இருந்து கைப்பற்றப்பட்ட செல்போனில் அவர் அஜ்மலுக்கு அனுப்பிய வாட்ஸ்அப் மெசேஜ்களை போலீஸார் ஆய்வு செய்தனர். இச்சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
மாசி மாதத்துல இத்தனை விசேஷமா... இந்த நட்சத்திர தினங்களை மிஸ் பண்ணாதீங்க!