மாணவர்களே பஞ்சர் கடை வைங்க... பாஜக எம்எல்ஏ சர்ச்சை பேச்சு!
மத்தியப்பிரதேச மாநிலத்தில் புதிய கல்லூரி திறப்பு விழா நடத்தப்பட்டது. இந்த திறப்பு விழாவில் குணா தொகுதி பாஜக எம்எல்ஏ பன்னலால் சாக்யா கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் மாணவர்கள் மத்தியில் பேசிய விஷயம் தற்போது சர்ச்சையாக மாறியுள்ளது. கல்லூரியில் படிக்கும் மாணவ மாணவிகள் மத்தியில் படிப்பை ஊக்குவிப்பதற்கு பதிலாக படித்து என்ன பலன் என பேசியுள்ளார்.

”அதன்படி படித்து பட்டம் பெறுவதால் எந்த பயனும் கிடையாது. அதற்கு பதிலாக பஞ்சர் பார்க்கும் கடை வைத்து பிழைக்கலாம். மேலும் வாழ்க்கையில் படித்து முன்னேற வேண்டும் ” என மாணவர்களுக்கு அறிவுரை வழங்குவதற்கு பதிலாக அவர் பஞ்சர் கடை வைக்க வேண்டும் எனக் கூறியது மாணவர்கள், பெற்றோர்கள் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா
