பாஜக ஒன்றிய தலைவர் அதிரடி கைது... பரபரக்கும் அரசியல் வட்டாரம்...!!

 
அய்யனவேல்

தமிழகத்தில் திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியை தடுத்து ஒப்பந்ததாரருக்கு கொலை மிரட்டல் விடுத்த ஆத்தூர் ஒன்றிய பாஜக தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே பட்டிவீரன்பட்டி ஆற்றின் அருகே பாலம் கட்டப்படும் வேலை நடைபெற்று வருகிறது.

ஆத்தூர்

இந்த ஆற்றை கடந்து செல்ல பாலம் கட்ட வேண்டும் என நீண்ட நாட்களாக  விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். விவசாயிகள் கோரிக்கையை ஏற்று ஊரக வேலை உறுதித் திட்ட நிதியில் இருந்து சுமார் ரூ.44 லட்சம் மதிப்பில் புதிய பாலம் கட்டப்பட்டு வருகிறது.இந்த பாலத்தை கட்டுவதற்கான  ஒப்பந்த பணியை அய்யம்பாளையத்தில் வசித்து வரும்  திருப்பதி  மேற்கொண்டு வருகிறார்.

கைது

இதனையடுத்து ஆத்தூர் ஒன்றிய பாஜக தலைவர் அய்யம்பாளைம்  அய்யனவேல் பாலம் கட்டும் பணிகள் நடைபெறும் இடத்தில்  தகராறு செய்துள்ளார். பாலம் கட்டக்கூடாது என  ஒப்பந்ததாரர் திருப்பதிக்கு அய்யனவேல் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.  இது குறித்து ஒப்பந்ததாரர் திருப்பதி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில்   போலீசார், வழக்குப்பதிவு செய்து ஒன்றிய பாஜக தலைவர் அய்யனவேலை கைது செய்துள்ளனர்.

ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம் சிறப்புக்கள்

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!

சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!

From around the web