அண்ணா பல்கலைக்கழகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!
தமிழகத்தின் தலைநகர் சென்னை குரோம்பேட்டையில் செயல்பட்டு வருகிறது அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி(எம்ஐடி). இந்நிலையில் எம்ஐடி கல்லூரியில் வெடிகுண்டு இருப்பதாக அண்ணா பல்கலைக்கழக பதிவாளருக்கு மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்பட்டது. மாணவர்களை வெளியேற்றும்படி மின்னஞ்சலில் தகவல் அனுப்பி மிரட்டல் விடுக்கப்பட்டது.

இது குறித்து உடனடியாக தாம்பரம் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து உதவி காவல் ஆய்வாளர் தலைமையில் 6 வெடிகுண்டு நிபுணர்கள் கொண்ட குழுவானது சென்னை குரோம்பேட்டையில் உள்ள எம்ஐடி கல்லூரிக்கு நேரில் சென்று வெடிகுண்டு இருக்கிறதா என சோதனை செய்து வருகின்றனர்.இந்த சோதனை காலை 8 மணி முதல் தொடர்ந்து 3 மணி நேரம் நடைபெற்றது.

ஆனால் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. ஏற்கனவே கடந்த சில மாதங்களுக்கு முன்பு இதேபோல் பல்வேறு கல்வி நிறுவனங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதேபோல் சென்னை குரோம்பேட்டை எம்ஐடி கல்லூரிக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. முழுமையான சோதனைக்கு பிறகு வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என உறுதி செய்யப்பட்டது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!
