முதல்வர் பிறந்தநாளில் பரபரப்பு... தலைமைச் செயலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்... ஓய்வு பெற்ற ஆசிரியரிடம் அடுத்தடுத்து விசாரணை!

 
வெடிகுண்டு மிரட்டல்

தமிழகம் முழுவதும் இன்று முதல்வர் ஸ்டாலினின் பிறந்தநாளை தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், இன்று காலை தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு, சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் குண்டு வெடிக்கும் மிரட்டல் அழைப்பு வந்ததால், தலைமைச் செயலகம் முழுவதும் போலீசாரும், வெடிகுண்டு நிபுணர்களும், மோப்ப நாய்களுடன் அதிரடியாக சோதனையில் ஈடுபட்டனர். 

வெடிகுண்டு மிரட்டல்
தலைமைசெயலகத்தில் அமைச்சர்கள் அறை, பேரவை நடைபெறும் இடம், முக்கிய அறைகள் என அனைத்து இடங்களிலும் அதிரடியாக சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. வெடிகுண்டு உள்ளதா என்பது குறித்து கருவிகள் மூலம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அனைத்து இடங்களிலும் இரண்டு குழுக்களாக பிரிந்து சோதனைகள் நடைபெற்றது. சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற இந்த சோதனையில் சந்தேகத்திற்குரிய பொருட்கள் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை.

வெடிகுண்டு மிரட்டல்

இதையடுத்து வெடிகுண்டு மிரட்டல் உண்மையா அல்லது புரளியா என்பது குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தலைமைச் செயலகம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் போலீசார் பாதுகாப்பை அதிகரித்துள்ளனர்.இந்நிலையில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக கடலூரைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியரான பிரகாஷ் என்பவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

மாசி மாதத்துல இத்தனை விசேஷமா... இந்த நட்சத்திர தினங்களை மிஸ் பண்ணாதீங்க!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web