தேங்கிய மழைநீரில் விழுந்து சிறுவன் பலி... கதறித் துடித்த பெற்றோர்!!

 
விஷ்வா

சென்னையின் பல பகுதிகளில் நேற்று மாலை முதலே மழை வெளுத்து வாங்கியது. இதனால் முக்கிய சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. ஆங்காங்கே குட்டைகளில் மழைநீர் தேங்கியது. செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் சானடோரியம் பகுதியில் வசித்து வருபவர்  கார்த்திக். இவரது மகன் விஷ்வா .இவர் ராமகிருஷ்ணபுரம் அரசு பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வந்தார்.  நேற்று மாலை சானடோரியம் மேம்பாலம் அருகே தனியார் பள்ளிக்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ள ரயில்வே இடத்தில், 3 நண்பர்களுடன் விளையாட சென்றார். 

கடல் நீர் மூழ்கி தண்ணீர்


 அப்போது, அங்கு மழை நீர் தேங்கி நின்ற குழியில் எதிர்பாராதவிதமாக சிறுவன் விஷ்வா தவறி விழுந்தார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவரது நண்பர்கள் அக்கம் பக்கத்தினரிடம் தகவல் தெரவித்தனர். அவர்கள் உடனடியாக தாம்பரம் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தாம்பரம் தீயணைப்புத்துறையினர், சுமார் ஒரு மணி நேரம் போராடி சிறுவனின் உடலை மீட்டனர்.

ஆம்புலன்ஸ்

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சிட்லபாக்கம் போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் சிறுவன் விஷ்வா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து சிட்லபாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும்,  சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web