விபத்தில் சிக்கி மூளைச்சாவடைந்த 26 வயது இளைஞர்.. உடல் உறுப்புகளை தானமாக கொடுத்த உறவினர்கள்..!
சாலைவிபத்தில் மூளை சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்ட நிலையில் அரசு மரியாதையுடன் உடல் அடக்கம் செய்யப்பட்டது..
கன்னியாகுமரி அருகே சுவாமிநாதபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன் (26). இவர், இரு தினங்களுக்கு முன், மனைவி மற்றும் குழந்தைகளுடன் நெல்லை மாவட்டம் செட்டிகுளம் பார்மனியூர் பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றார். திரும்பி வரும் வழியில், பைக்கில் சென்ற போது, அவ்வழியாக வந்த கார் மோதியதில், பிரவீன் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. பைக்கில் வந்த இரண்டு குழந்தைகள் லேசான காயத்துடன் உயிர் தப்பினர். அவரது மனைவி பிரியா சோபாவின் காலில் காயம் ஏற்பட்டது.
இதனிடையே பலத்த காயம் அடைந்த பிரவீன் நினைவாற்றலை இழந்தார். கணவன், மனைவி இருவரும் மீட்கப்பட்டு கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். பின்னர், சோபா தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதில் தலையில் காயம் அடைந்த பிரவீன் மூளைச்சாவு அடைந்தார். இதனால் அவர் உயிர் பிழைப்பது கடினம் என்றும், அவரது உடல் உறுப்புகளை தானம் செய்யுமாறு அவரது குடும்பத்தினரிடம் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
இதற்கு பிரவீனின் குடும்பத்தினர் சம்மதம் தெரிவித்ததையடுத்து, மருத்துவக் குழுவினர் பிரவீனின் உடலில் இருந்து கண்கள், சிறுநீரகம் மற்றும் நுரையீரலை அறுவை சிகிச்சை மூலம் அகற்றினர். இதில் திருநெல்வேலியில் உள்ள கண் மருத்துவமனைக்கு கண்கள் தானமாக வழங்கப்பட்டது. சிறுநீரகம் மற்றும் நுரையீரல்கள் மதுரை மற்றும் திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
தொடர்ந்து, கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள், மருத்துவக் கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் உடல் உறுப்புகளைத் தானம் செய்த இளைஞரின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து, உடல் உறுப்பு தானம் செய்தவர்களுக்கு அரசு மரியாதை செலுத்திய பின் பிரவீனின் உடல் தகனம் செய்யப்பட்டது.
தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?
தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!
தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!
தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க