டிவி நிகழ்ச்சி தொகுப்பாளரைக் கடத்தி திருமணம் செய்து கொள்ள மிரட்டிய இளம்பெண் தொழிலதிபர்!

 
போகிரெட்டி

டி.வி. நிகழ்ச்சி தொகுப்பாளரை கடத்திச் சென்று திருமணம் செய்து கொள்ள நினைத்த இளம்பெண் தொழிலதிபரையும், அவருக்கு உடந்தையாக இருந்த 4 பேரையும் ஹைதராபாத் போலீசார் கைது செய்துள்ளனர்.

தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் போகிரெட்டி த்ரிஷா (31).  இளம் தொழிலதிபரான போகிரெட்டி த்ரிஷா, டி.வி. நிகழ்ச்சி தொகுப்பாளர் பிரணவ் சிஸ்ட்லாவின் புகைப்படத்தை மேட்ரிமோனி வலைதளத்தில் பார்த்து அவருடன் சாட்டிங்கில் ஈடுபட்டு வந்தார். நாளடைவில் நிகழ்ச்சி தொகுப்பாளரின் புகைப்படத்தை தவறாக பயன்படுத்தி, வேறொருவர் தன்னுடன் சாட்டிங்கில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்து அதிர்ச்சியடைந்தார். ஆனாலும், தொகுப்பாளர் பிரணவ் போட்டோவைப் பார்த்து மனதை பறிகொடுத்த போகிரெட்டி த்ரிஷா, உண்மையிலேயே அவரை கண்டறிந்து, மோசடியாக அவரது புகைப்படம் பயன்படுத்தப்பட்டதை தெரிவித்துள்ளார்.

போகிரெட்டி

அதன் பிறகு பிரணவ் சிஸ்ட்லாவும் இது குறித்து காவல் நிலையத்தில் புகாரளித்தார். இந்த சம்பவத்துக்குப் பிறகும் போகிரெட்டி த்ரிஷா, பிரணவ் சிஸ்ட்லாவிடம் சாட்டிங்கை தொடர்ந்துள்ளார். ஆனால் ஒரு கட்டத்தில் அவர், போகிரெட்டி த்ரிஷாவை பிளாக் செய்து விட்டார். இதனால் கோபத்தின் உச்சத்திற்கு சென்ற போகிரெட்டி த்ரிஷா, 4 பேரை கூலிக்கு அமர்த்தி, பிரணவ் சிஸ்ட்லாவை கடத்தி தனது அலுவலகத்துக்கு கொண்டு வந்தார்.

அதன் பின்னர், தன்னை திருமணம் செய்து கொண்டால் தான் விடுவிப்பேன் என அவரை தாக்கி மிரட்டியுள்ளார். இதனால் பிரணவ் சிஸ்ட்லா வேறு வழியின்றி, அவரது விருப்பத்தின் பேரில் செயல்பட்டு அங்கிருந்து தப்பித்துள்ளார்.

போகிரெட்டி

பின்னர், தனக்கு நேர்ந்த சம்பவம் குறித்து ஹைதராபாத் போலீசில் பிரணவ் சிஸ்ட்லா புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து, போகிரெட்டி த்ரிஷா மற்றும் கடத்தலுக்கு அவர் அமர்த்திய 4 நபர்கள் ஆகிய 5 பேரை கைது செய்தனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

மாசி மாதத்துல இத்தனை விசேஷமா... இந்த நட்சத்திர தினங்களை மிஸ் பண்ணாதீங்க!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web