சோறும், காசும் எடுத்திட்டு வாங்க.. செல்போன் திருடன் வைரல் ஆடியோ!!
செல்போன் திருட்டுக்கள் சமீபகாலமாக வைரலாகி வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் செல்போன் திருடிய திருடன் செல்போனிலிருந்து உரிமையாளருக்கு போன் செய்து சோறும், காசும் கேட்டிருக்கிறான். இந்த ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கடலூர் மாவட்டம் பண்ருட்டி திராசு கிராமத்தில் வசித்து வருபவர் ஏழைப்பெருமாள். இவர் விவசாயத் தொழில் செய்து வருபவர் இவர் தனது வீட்டில் செல்போனை சார்ஜ் போட்டு உள்ளார். அதனை மர்ம நபர் ஒருவர் திருடி சென்றிருந்தார். இந்நிலையில், அடுத்த நாள் காலையில் திருடு போன செல்போனில் இருந்து பெருமாள் மனைவியின் மொபைலுக்கு அழைப்பு வந்துள்ளது.
அதில் பேசிய நபர் ஒருவர், நான் தான் திருடன் பேசுறேன்.. உங்க 4 போனை நான் தான் எடுத்திட்டு போனேன். நான் திருட்டு பய தான். பணம் கிடைத்தால் பணம் எடுப்பேன், செல் போன் கிடைத்தால் செல்போன் எடுப்பேன். இப்ப எனக்கு ரூ15000 தேவை. 4 போன் இருக்கு அப்படியே கொடுத்திடுவேன் எனக் கூறியுள்ளார். போன் உரிமையாளர் ரூ2000 அல்லது ரூ3000 தான் கொடுக்க முடியும். கடைக்கு போய் புதிய போன் வாங்க வேண்டும் என்றால், முழுவிலையும் கொடுத்து போன் வாங்க வேண்டும். எனவே ரூ15000 கொடுங்க. வரும்போது ஓட்டலில் சாப்பாடு வாங்கி வாருங்கள் என தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய திருடன், உங்களுக்கு செல்போன் வேண்டும் என்றால் பணம் கொடுங்க.. போலீசுக்கு போகாதீங்க, போலீசுக்கு போனாலும் எந்த வித பயனும் இல்லை, போலீஸ் என்னைய விட மோசமானவங்க,
என்னிடம் எதாவது வாங்கிட்டு விட்டுருவாங்க. உங்க ஊர் பக்கத்தில் இருக்கிற ஒரு இடத்திலும் செல்போனை திருடிவிட்டு வந்துட்டேன், அவர்களையும் என்னை தொடர்பு செய்ய சொல்லுங்கள் என கூறுகிறான். மேலும் விடிவதற்குள் வந்தால் தான் தருவேன், காலையில் போனை எடுக்க மாட்டேன் என கூறியுள்ளார். இதனையடுத்து பாதிக்கப்பட்ட ஏழை பெருமாள் போலீசிடம் திருடன் தொலைபேசியில் பேசியது குறித்து புகார் அளித்துள்ளார். இதனையடுத்து கரும்பு தோட்டத்திற்கு திருடன் அய்யனாரை வரவழைத்த போலீசார் சுற்றி வளைத்தனர். பணம் கேட்டு திருடன் பேசிய ஆடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...