இந்த 10 அறிகுறிகளை அலட்சியப்படுத்தாதீங்க... புற்றுநோயாக இருக்கலாம்... ஆய்வு முடிவுகள் எச்சரிக்கை... !
காய்ச்சல், தலைவலி, வயிற்று வலி போல் இப்போதெல்லாம் தெருவுக்கு 4 பேர் புற்றுநோய் என்கின்றனர். இதனைக் கேட்டாலே அபாயம் என்ற எச்சரிக்கை மனத்தில் அலாரம் அடிக்கத் தொடங்கிவிடும். ஆனால் 1970 முதல் தற்போது உயிர்பிழைத்து வாழ்ந்து வருபவர்களின் எண்ணிக்கை 3 மடங்கு அதிகரித்துள்ளது. பெரும்பாலான வகை புற்றுநோய்கள் ஆரம்ப நிலையிலேயே கண்டறியப்பட்டால் அவை குணப்படுத்தக் கூடியவை என்பது நம்மில் பலரும் அறியாதது. ஆரம்ப கால அறிகுறிகளை நாம் புறக்கணித்து விடுவதே ஆபத்துக்கு காரணம் என்கின்றனர் மருத்துவர்கள்.
Cancer Research UK என்ற அமைப்பு இது குறித்து நடத்திய ஆய்வில் சில ஆரம்ப அறிகுறிகளை அறிவித்துள்ளது. புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் இந்த அறிகுறிகளால் சிரமங்களை அனுபவித்ததாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. இதில் 2% பேர் மட்டுமே தாம் இந்த நோயால் பாதிக்கப்படலாம் என நினைத்திருந்தனர். மீதி பேர் அலட்சியப்படுத்தினர். இது குறித்து ஆய்வு மேற்கொண்ட லண்டன் யுனிவர்சிட்டி காலேன் ஆராய்ச்சியாளர் கத்ரீனா விட்டேக்கர்,” பொதுமக்களை பொறுத்தவரை உடல்நிலையைப் பற்றிக் காரணமில்லாமல் கவலைப்படக் கூடாது. சில விஷயங்களை மருத்துவரிடம் சொல்ல கூச்சப்படுகின்றனர். மறைந்து போகாத தொடர் சிரமங்கள், அறிகுறிகள் இருந்தால் அவை ஒரு வேளை புற்றுநோய்க்கான அறிகுறிகளாக இருக்கலாம். இதனை ஒரு போதும் புறக்கணிக்கக்கூடாது, உடனடியாக மருத்துவரின் ஆலோசனை பெற வேண்டியது அவசியமே.
1எந்தக் காரணமும் இல்லாமல் உடல் எடை 5 கிலோ அல்லது அதற்கு மேற்பட்டு குறைந்தால், அது புற்றுநோயின் முதல் அறிகுறியாக இருக்கலாம்
2 புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஒவ்வொருவரும் ஒரு கட்டத்தில் காய்ச்சலை அனுபவிப்பார்கள்
3. தீராத தீவிரமான உடல் சோர்வு புற்றுநோய்க்கான அறிகுறி
4.திடீரென சருமம் கருமையாகுதல், தோல் மற்றும் கண்கள் மஞ்சள் நிறமாக மாறுதல், தோல் சிவத்தல் , அரிப்பு ,அதிகப்படியான முடி வளர்ச்சி
5. தொடர் மலச்சிக்கல், அடுத்தடுத்து வயிற்றுப்போக்கு, செரிமானப் பிரச்சனைகள், ஒவ்வாமை, சிறுநீர் கழிக்கும் போது வலி, சிறுநீரில் இரத்தம் அல்லது சிறுநீர்ப்பை செயல்பாட்டில் மாற்றங்கள்
6. வளரும், வலி ஏற்படுத்தும், அல்லது இரத்தம் கசியும் மச்ச்சங்கள் புற்றுநோயின் அறிகுறிகளாக இருக்கலாம் அதே நேரத்தில் ஒரு மாதமாக ஆறாத காயம் குறித்தும் கவனம் கொள்ள வேண்டியது அவசியமே.
ஆண்குறி அல்லது பெண்ணுறுப்பில் ஏற்படும் புண்கள், தொற்று அல்லது ஆரம்ப நிலை புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம். புற்றுநோயுடன் ஆரம்ப அல்லது மேம்பட்ட நிலைகளில் அசாதாரண இரத்தப்போக்கு ஏற்படலாம். இருமும் போது இரத்தம் வருவது நுரையீரல் புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம்.
7மலத்தில் இரத்தம் அதுவும் கருமையாக இருந்தால் மலக்குடல் புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம்.
மேலும், சிறுநீரில் இரத்தம் வருவது சிறுநீர்ப்பை அல்லது சிறுநீரகப் புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம்.முலைக் காம்பிலிருந்து இரத்தம் தோய்ந்த கசிவு வெளிவருவது மார்பகப் புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம்.
8பல புற்றுநோய்களை தோலில் ஏற்படும் மாற்றங்களால் மிக எளிதாக உணரலாம். தடிப்பு அல்லது கடினமாக்குதல் புற்றுநோயின் ஆரம்ப அல்லது மேம்பட்ட நிலையின் அறிகுறியாக இருக்கலாம்.
9. தொடர்ந்து அஜீரணம் அல்லது விழுங்குவதில் சிரமம் இருந்தால் அது உணவுக்குழாய், வயிறு அல்லது குரல்வளை (தொண்டை) புற்றுநோயின் அறிகுறிகளாக இருக்கலாம்.
10இருப்பினும், இந்தப் பட்டியலில் உள்ள பெரும்பாலான அறிகுறிகளைப் போலவே, அவை பெரும்பாலும் புற்றுநோயைத் தவிர வேறு சில காரணங்களும் இருக்கலாம் என்பதையும் மனதில் வைப்பது நல்லது.
தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?
தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!
தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!
தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க