பெரும் சோகம்... காரும் லாரியும் நேருக்கு நேர் மோதல்... 3 இளைஞர்கள் உடல் நசுங்கி பரிதாப பலி!!
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியில் வசித்து வருபவர் பூபாபலன் , நிதிஷ், பிரேம்குமார் . மூவரும் நாமக்கலில் இருந்து பொள்ளாச்சிக்கு காரில் சென்றுக் கொண்டிருந்தனர். அதே நேரத்தில் கேரளாவில் இருந்து இரும்பு பொருட்களை ஏற்றிக்கொண்டு சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த லாரி கார் மீது நேருக்கு நேர் மோதியது.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் நோக்கி அருகே மாதப்பூரில் காரும் லாரியும் நேருக்கு நேர் மோதிய கோர விபத்தில் கார் பள்ளத்தில் பாய்ந்து அப்பளம் போல் நொறுங்கியது.
இந்த விபத்தில் காரில் பயணம் செய்த 3 இளைஞர்களும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
லாரி ஓட்டுனர் விபத்து நடந்ததும் தப்பி ஓடி விட்டார். உடனடியாக அக்கம்பக்கத்தினர் இந்த விபத்து குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் 3 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து லாரி ஓட்டுநரை தேடி வருகின்றனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...