தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில் சிசிடிவி கட்டாயம்... மீறினால் லைசென்ஸ் ரத்து...அதிரடி உத்தரவு!
குற்ற செயல்கள் நடைப்பெறுவதை தடுக்கும் பொருட்டு, தேர்தல் எதிரொலி காரணமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இந்தியாவில் விரைவில் லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளதால் தேர்தல் கமிஷன் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன்மூலம், லோக்சபா தேர்தலை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மதுபான கடைகள் மற்றும் மதுபான கூடங்களில் சிசிடிவி கேமரா பொருத்த மதுவிலக்கு நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து, தமிழகம் முழுவதும் உள்ள மதுக்கடைகள் மற்றும் தனியார் பார்களுக்கு மதுவிலக்கு நிர்வாகம் கடிதம் அனுப்பியுள்ளது. அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:- “நாடாளுமன்ற தேர்தலின் போது சட்டவிரோத மதுபான விற்பனையை தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தேர்தல் கமிஷன் உத்தரவின்படி, மதுக்கடைகளில் சிசிடிவி கேமரா பொருத்தவும், அது தொடர்பான புகைப்படங்களை அனுப்பவும் மதுவிலக்கு நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. 'சிசிடிவி' பொருத்தாவிட்டால், பார் ஒப்பந்ததாரரின் உரிமம் ரத்து செய்யப்படும்' எனவும், எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
மாசி மாதத்துல இத்தனை விசேஷமா... இந்த நட்சத்திர தினங்களை மிஸ் பண்ணாதீங்க!