பாரிஸில் கோலாகலம்... கால்பந்து போட்டியுடன் இன்று துவங்குகிறது 33வது ஒலிம்பிக் திருவிழா 2024!

உலகம் முழுவதும் விளையாட்டு ரசிகர்களின் பெரும் திருவிழாவாக ஆரவாரத்துடன் பிரான்ஸின் தலைநகர் பாரிஸில் இன்று 33வது ஒலிம்பிக் திருவிழா தொடங்குகிறது.
முன்னதாக ஜூலை 26ம் தேதி முதல் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்குகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கால்பந்து மற்றும் ரக்பி போட்டிகள் இன்று முதல் தொடங்குகிறது.
விளையாட்டுப் போட்டிகளின் தொடக்க விழா ஜூலை 26-ம் தேதி நடைபெற உள்ள போதிலும், சில போட்டிகள் இன்று முதல் தொடங்கும். அதன்படி, பாரிஸ் ஒலிம்பிக் போட்டி கால்பந்து போட்டியுடன் தொடங்குகிறது. இன்றைய போட்டியில் அர்ஜென்டினா மற்றும் மொராக்கோ அணிகள் மோதுகின்றன.
நாளை ஜூலை 25-ம் தேதி வில்வித்தையுடன் ஒலிம்பிக் போட்டியில் இந்தியா தனது ஆட்டத்தை தொடங்குகிறது.
ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா