பரபரப்பு... பிரபல சின்னத்திரை நடிகர் வீட்டில் செல்போன் , லேப்டாப் திருட்டு...!!

 
ஜெயச்சந்திரன்

பிரபல சின்னத்திரை நடிகர் ஜெயச்சந்திரன். இவர்  தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும்  'கலக்கப் போவது யாரு சீசன்-9'  காமெடி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெற்றிப் பெற்றவர்.  இவர் சென்னை வடபழனி அழகர் பெருமாள் கோவில் தெருவில் வசித்து வருகிறார். இது தவிர   பல்வேறு டிவி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு   வருகிறார்.இந்நிலையில் நேற்று இரவு ஜெயச்சந்திரன் வீட்டு கதவை திறந்து வைத்துக் கொண்டே தூங்கிவிட்டார்.

ஜெயச்சந்திரன்

அந்த சமயம் பார்த்து  உள்ளே நுழைந்த அடையாளம் தெரியாத நபர்கள் வீட்டில் இருந்த ரூ1.5 லட்சம்  மதிப்பிலான லேப்டாப் மற்றும் செல்போனை‌ திருடிச் சென்றனர். காலையில் எழுந்து பார்த்த ஜெயச்சந்திரன் அதிர்ச்சிஅடைந்தார். வீட்டில் இருந்த லேப்டாப், செல்போன் திருடு போயிருந்ததை கண்டு  வடபழனி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில்   போலீஸார் வழக்கு பதிவு செய்து சம்பவ இடத்தில் பதிவான சிசிடிவி காட்சிகளை கைப்பற்றியுள்ளனர்.

திருட்டு

இந்த காட்சிகளின் அடிப்படையில் தீவிர  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கேகே நகரில் வசித்து வந்த நடிகர் ஜெயச்சந்திரன் கடந்த 6 நாட்களுக்கு முன்பு தான் வடபழனிக்கு வீட்டிற்கு குடிபெயர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம் சிறப்புக்கள்

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!

சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!

From around the web