செம... நாமக்கல் மண்ணில் சந்திராயன்!!
சந்திரயான் 3 திட்டத்திற்கு நாமக்கல்லில் இருந்து மண் எடுத்து வந்தனர். ஜூலை 22, 2019ல் நிலவின் தென் துருவ பகுதியை ஆய்வு செய்வதற்காக சந்திரயான் 2 விண்ணில் செலுத்தப்பட்டது. சந்திராயன் 2ல் இருக்கும் ஆர்பிட்டர் 2019 செப்டம்பரில் நிலவின் வட்டப்பாதையில் வெற்றிகரமாக நிறுத்தப்பட்டது. ஆனால் அதன் லேண்டர் விக்ரம் தரையில் இறங்கும் முன் 2.1 கிமீ தூரத்தில் சிக்னலை இழந்துவிட்டது. சந்திரயான் 2ன் விக்ரம் லேண்டர் விழுந்து நொறுங்கியதை 3 மாதமாக இஸ்ரோ தீவிரமாக தேடியது. அதன்பின் இதை நாசா கண்டுபிடித்தது. லேண்டர் இறங்காத காரணத்தால் உள்ளே இருக்கும் ரோவரும் வெடித்து சிதறியது. திட்டம் முழு தோல்வி அடையாமல் கடந்த ஒன்றரை வருடங்களாக ஆர்பிட்டர் வெற்றிகரமாக நிலவை சுற்றியது.
இதையடுத்து தற்போது சந்திரயான் 3 திட்டம் செய்யப்பட்டு உள்ளது உள்ளது. விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவர் இரண்டையும் மீண்டும் நிலவில் வெற்றிகரமாக களமிறக்கும் திட்டத்தில் இஸ்ரோ களமிறங்கிய போது நாமக்கல் மாவட்டம் பெரும் உதவி செய்துள்ளது. தற்போது சந்திரயான் 3 திட்டத்தில் சந்திரயான் 2ல் இருந்தது போல ஆர்பிட்டர் இருக்காது. மாறாக விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவர் இரண்டு மட்டுமே உள்ளது. இதில் ப்ரோபல்ஷன் மாடல் என்ற ஒரு உந்த கூடிய ப்ரோபல்ஷன் என்ற பகுதியும் உள்ளது. இதுதான் இந்த லேண்டர், ரோவரை நிலவிற்கு கொண்டு செல்லும். இன்று மாலை 6.04 மணிக்கு விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்க உள்ளது. சந்திரயான் 3 திட்டத்தின் ரோவர் மற்றும் லேண்டர் நிலவின் தரையில் தரையிறங்குவதற்காக இங்கேயே இஸ்ரோ ஆய்வு மையங்களில் பயிற்சிகள் செய்யப்பட்டன. இவை நிலவில் இறங்குவதற்காக பூமியில் வைத்து சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதனால் இஸ்ரோ பூமியிலேயே நிலவு போன்ற சுற்றுசூழலை உருவாக்கி ஆராய்ச்சி கூடத்தில் வைத்து ஆராய்ச்சி செய்யப்பட்டது.
அதாவது ஆராய்ச்சி கூடத்தில் நிலவில் இருப்பது போலவே ஈர்ப்பு விசை வைத்து, அங்கு இருக்கும் வாயுக்களை மட்டும் பயன்படுத்தி,மிக மிக குளிரான வானிலையில், விக்ரம் லேண்டர் சரியாக தரை இறங்குகிறதா என பரிசோதனை செய்தது. இதற்காக நிலவில் இருப்பது போல தரையும், மண்ணும் பயன்படுத்தப்பட்டுள்ளது. சந்திரயான் 1ஐ அனுப்பிய போது இஸ்ரோ நாசாவிடம் இருந்து மண்ணை கிலோ 150 டாலருக்கு விலை வாங்கியது. மொத்தம் 10 கிலோ மண் வாங்கப்பட்டது. சந்திரயான் 2விற்கு 60 கிலோ வரை இந்த மணல் தேவைப்பட்டது. அதனால் அப்போது இஸ்ரோ நாசாவை நம்பவில்லை. தற்போது நாமக்கல் பகுதியில் உள்ள 2 கிராமங்களில் இருந்து இஸ்ரோ மண் வாங்கி உள்ளது. அதே மண்ணைதான் இப்போது சந்திரயான் 3 திட்டத்திற்கும் இஸ்ரோ பயன்படுத்தி உள்ளது. நாமக்கல் கிராமம்: ஆம் நாமக்கல்லில் உள்ள சிட்டாம்பூண்டி, குன்னமலை ஆகிய கிராமங்களில் இருக்கும் பாறைகளை வாங்கி, அதை சேலத்தில் உள்ள தொழிற்சாலையில் தூளாக நொறுக்கியது. அதன் மூலம் கிடைத்த மண் நிலவில் இருக்கும் மணலை போலவே இருந்தது. ள்ளது. இதன் மூலம் சோதனை செய்து பார்க்கப்பட்டது. இதில் செய்யப்பட்ட சோதனையின் அடிப்படையில்தான் தற்போது சந்திரயான் 3 விண்ணில் ஏவப்பட்டுள்ளது. இதற்காக குறிப்பிட்ட 2 கிராம மக்களும் பணம் எதுவும் வாங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சந்திரயான் 3விற்கு உதவி செய்வதே பெரிய மகிழ்ச்சி என கூறியுள்ளனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!