நாளை செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு... கரையோர மக்களுக்கு எச்சரிக்கை!!

 
செம்பரம்பாக்கம் ஏரி

 சென்னையின்  முக்கிய குடிநீர்   ஆதாரங்களில் ஒன்று செம்பரம்பாக்கம் ஏரி. இந்த ஏரி  25.51 சதுர கி.மீ பரப்பளவில் குன்றத்தூர் வட்டம், காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. ஏரியின் நீர் மட்ட மொத்த உயரம் 24   அடி.  இதன் முழு கொள்ளளவு 3645 மில்லியன் கன அடியாக இருந்து வருகிறது.  அக்டோபர் 7ம் தேதி இன்று  நீர் இருப்பு 21.96 அடியாகவும் கொள்ளளவு 3110 மில்லியன் கன அடியாகவும் உள்ளது.

செம்பரம்பாக்கம் ஏரி


செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் வரத்து தற்போது விநாடிக்கு 231 கன அடியாக உள்ளது. தற்போது ஏரிக்கு வரும் நீர் வரத்தினால் 22 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் ஏரியின் நீர்பிடிப்பு பகுதிகளில் அவ்வப்போது விட்டு விட்டு மழை பெய்து வருவதால்  தொடர்ந்து செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது.இதன் அடிப்படையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நாளை காலை அக்டோபர் 8, .2023ம் தேதி காலை 10.00 மணிக்கு விநாடிக்கு வெள்ளநீர் போக்கி வழியாக 100 கனஅடி உபரி நீர் திறக்கப்படும் என  உத்தேசிக்கப்பட்டுள்ளது.

செம்பரம்பாக்கம் ஏரி


ஏரியிலிருந்து மிகை நீர் வெளியேறும் வாய்க்கால் செல்லும் கிராமங்களான சிறுகளத்தூர், காவனூர், குன்றத்தூர், திருமுடிவாக்கம், வழுதியம்பேடு, திருநீர்மலை மற்றும் அடையாறின்  கரையின் இரு புறமும் உள்ள தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும் படி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

From around the web