சோகம்... வந்தே பாரத் ரயிலில் இருந்து கீழே விழுந்து சென்னை பயணி பலி... !!
தமிழகத்தில் சென்னை கோவை இடையே வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. செப்டம்பர் 26ம் தேதி வந்த வந்தே பாரத் ரயிலில் சென்னை கீழ்கட்டளை திருவள்ளுவர் தெருவில் வசித்து வரும் ஓய்வு பெற்ற போக்குவரத்து ஆய்வாளர் பவுலேஷ் தனது மனைவியுடன் ஈரோட்டுக்கு பயணம் செய்தார். மாலை 6.05 மணிக்கு சேலத்திற்கு வந்த வந்தே பாரத் ரயில், 4வது பிளாட்பாரத்தில் நின்றுகொண்டு இருந்தது. இருக்கையில் இருந்து எழுந்த பவுலேஷ், ரயிலின் அவசர கதவு அருகே நின்றிருந்தார். அப்போது திடீரென கதவு திறக்கவும், மறுபுறத்தில் 5வது பிளாட்பாரம் தண்டவாளத்தில் பவுலேஷ் விழுந்துவிட்டார்.
தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவசர கதவின் பட்டனை யாரும் அழுத்தி திறக்காத நிலையில், அது எப்படி திறந்து பவுலேஷ் கீழே விழுந்தார் என விசாரணை நடத்தப்பட்டது. அதில் சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் நேரடியாக சேலம் ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்து ஆய்வ் செய்தார். விபத்து நிகழ்ந்த வந்தே பாரத் ரயிலின் சி3 பெட்டியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தார்.
சேலம் ரயில்வே ஸ்டேஷன் 4வது பிளாட்பாரத்தில் வந்தே பாரத் ரயில் வந்து நிற்கவும், 5வது பிளாட்பாரம் பகுதியில் இருந்த 2 ரயில்வே ஊழியர்கள் தண்டவாள பாதை வழியே இறங்கி வந்து ரயிலின் அவசர கதவின் பட்டனை அழுத்தி திறந்து, ரயிலில் ஏறி மறுமுனையில் 4வது பிளாட்பாரத்தில் இறங்கிச் சென்றனர். இந்த காட்சி பதிவாகி இருந்தது. அவசர கதவு பகுதிக்கு பவுலேஷ் சென்று கதவின் மீது கை வைக்கவும் அது திறந்து கீழே விழுந்து உயிரிழந்திருப்பது கண்டறியப்பட்டது. கதவை திறந்து சென்ற பாயிண்ட்மேன்களான தாமரைச்செல்வன், ஒய்.எஸ்.மீனா இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்தது. அத்துடன் அவர்கள் மீது துறை ரீதியான விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...