சிட்பண்ட் நிறுவனம் நடத்தி ரூ.2.4 கோடி மோசடி... நிறுவன இயக்குநர் கைது!

 
சிட்பண்ட்
 

சிட்பண்ட் நிறுவனம் நடத்தி ரூ.2.4 கோடி மோசடி செய்த வழக்கில், நிறுவன இயக்குநர் மற்றும் கணக்காளர் என இருவரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.சென்னை கோவிலம்பாக்கத்தை சேர்ந்த டில்லிபாபு (39), 2019ஆம் ஆண்டு முதல் அரும்பாக்கத்தில் இயங்கி வந்த ஒரு சிட்பண்ட் நிறுவனத்தில் ரூ.2.17 லட்சம் வரை முதலீடு செய்திருந்தார். சீட்டு பணம் முதிர்ந்த பிறகும், டில்லிபாபு உள்ளிட்ட சுமார் 70 பேருக்கு ரூ.2.4 கோடிக்கும் மேற்பட்ட தொகை திருப்பி வழங்கப்படவில்லை. பின்னர் நிறுவனம் திடீரென மூடப்பட்டு, அதன் உரிமையாளர் மற்றும் நிர்வாகிகள் தலைமறைவாகினர்.

டெல்லி போலீஸ்

இதனால் ஏமாந்த முதலீட்டாளர்கள், கடந்த செப்டம்பர் 8ம் தேதி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், அந்த சிட்பண்ட் நிறுவனம் வாடிக்கையாளர்களிடம் இருந்து பணம் வசூலித்து, திருப்பி வழங்காமல் மோசடி செய்தது உறுதியானது. இதையடுத்து தலைமறைவாக இருந்த நிறுவன இயக்குநர் கோயம்புத்தூர் ஆர்.எஸ்.புரத்தை சேர்ந்த ஆனந்தன் (48) என்பவரை போலீசார் கடந்த 28ஆம் தேதி கோயம்புத்தூரில் கைது செய்தனர். மேலும், நிறுவனத்தின் கணக்காளர் அரும்பாக்கத்தை சேர்ந்த வினோத் குமார் (32) என்பவரையும் சென்னை பகுதியில் கைது செய்தனர்.

கைது

விசாரணைக்குப் பிறகு இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கில் மேலும் சிலர் தொடர்புடையிருக்கலாம் என போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!