நிலக்கரி சுரங்கம் இடிந்து விழுந்து கோர விபத்து.. 5 பணியாளர்கள் பரிதாப பலி!
சீனாவின் வடக்கு பகுதியில் உள்ள ஷான்சி மாகாணத்தில் நிலக்கரி சுரங்கம் இயங்கி வருகிறது. இந்த நிலக்கரி சுரங்க கிடங்கு நேற்று இரவு 10.15 மணியளவில் திடீரென இடிந்து விழுந்தது. இந்த சம்பவத்தில் 7 பேர் கிடங்கில் சிக்கியதாக தகவல் வெளியானது.
இந்த விபத்து குறித்து காவல்துறை மற்றும் மீட்புக் குழுவினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மற்றும் மீட்பு படையினர் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், இன்று காலை 7 மணியளவில் சுரங்கத்தில் இருந்து 5 பேரின் உடல்கள் மீட்கப்பட்டது என தகவல் வெளி வந்துள்ளது. இதையடுத்து, இடிபாடுகளில் சிக்கிய மேலும் 2 பேரை தேடும் பணியில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
மாசி மாதத்துல இத்தனை விசேஷமா... இந்த நட்சத்திர தினங்களை மிஸ் பண்ணாதீங்க!