தவ காலத்தில்... வேதம் சொல்லும் வாயால் ஆபாச வார்த்தை... சர்ச்சில் வெடித்த கலவரம்!

 
சர்ச்

கிறிஸ்தவர்களின் தவக்காலம் நடந்து வருகிறது. இந்நிலையில், வேதம் சொல்லும் வாயால், ஒருவருக்கொருவர் ஆபாச வார்த்தைகளால் அர்ச்சித்து கொண்டனர். இத்தனைக்கும் சர்ச் பாதிரியார்கள் இப்படி நடந்து கொண்ட வீடியோ கிறிஸ்தவர்களை முகம் சுளிக்க வைத்துள்ளது. தூத்துக்குடி நாசரேத் தேவாலயத்திற்கு சொந்தமான பரி பேட்டரிக் சர்ச் தூத்துக்குடி 1வது ரயில்வே கேட் அருகே உள்ளது. இந்த ஆலையத்தில் செல்வின் துரை தலைமையில் புதிய சேகர கமிட்டி பதவியேற்றதையடுத்து கமிட்டி உறுப்பினர்கள் கோயில்பிச்சை, தேவராஜன், எஸ்டிகே ராஜன், ரூபன் ஆகியோர் குழுவில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து  செல்வின் துரைக்கும், எதிர் கட்சியினருக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு நிலவி வருகிறது.

சர்ச்

இதன் காரணமாக காவல் துறை மற்றும் வருவாய்த் துறையினர் தலைமையில் அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்று பரி பேட்ரிக் தேவாலயத்தில் ஒன்றுகூடல் குழுக் கூட்டம் நடைபெறுவதில்லை என முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று காலை ஆலய பரி பேட்டரிக்கான சேகர கமிட்டி கூட்டம் நடைபெறும் என குரு செல்வின் துரை நேற்று வாட்ஸ்அப் மூலம் உறுப்பினர்களுக்கு தெரிவித்துள்ளார்.

இதனை எதிர்த்து இன்று மற்றொரு பிரிவினர் தேவாலயத்திற்குள் சென்று விதிகளை மீறி கூட்டம் நடைபெறுவதாக கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு வாக்குவாதம் ஏற்பட்டு ஒருவரையொருவர் தகாத வார்த்தைகளால் திட்டிக் கொண்டனர்.

clash between 2 gangs at church in thoothukudi vel

மேலும் இரு தரப்பினரும் ஒருவர் மீது ஒருவர் புகார் தெரிவித்தனர். இதையடுத்து பாதுகாப்புப் படையினர் இரு தரப்பினரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். தூத்துக்குடியில் உள்ள தேவாலயத்தில் இரு தரப்பினரிடையே மோதல் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

மாசி மாதத்துல இத்தனை விசேஷமா... இந்த நட்சத்திர தினங்களை மிஸ் பண்ணாதீங்க!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web