மரண ஓலம்... சர்ச்சில் மேற்கூரை இடிந்து விழுந்து 10 பேர் பலி.. 60 பேர் படுகாயம்... அதிர்ச்சி வீடியோ..!!

 
மெக்சிகன்

வடக்கு மெக்சிகோவில் சர்ச்சில் பிரார்த்தனை நடைபெற்று கொண்டிருந்த போது   மேற்கூரை இடிந்து கோர  விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர். சுமார் 60 பேர்  படுகாயம் அடைந்தனர். உயிரிழந்தவர்களில்  4 மாத குழந்தை, 5 வயது குழந்தைகள் 3 பேர் மற்றும் 9 வயது குழந்தைகள் 2 பேர் அடங்குவர்.தகவல் தெரிவிக்கப்பட்டதும் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறை மற்றும் மீட்பு குழுக்கள்  இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். மோப்ப  நாய்கள் இடிபாடுகளில் சிக்கியவர்களை காட்டிக் கொடுக்கும் நிகழ்வில் ஈடுபடுத்தப்பட்டன.


இந்த விபத்து நடந்த சமயத்தில் சுமார் 100க்கும் மேற்பட்டோர் இருந்ததாகத் தெரிவித்துள்ளனர்.  30 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் எனவும் மாநில காவல்துறை தெரிவித்துள்ளது. மெக்சிகோவில் நிலநடுக்கங்களின் போது கட்டிடங்கள் இடிந்து விழுவது பொதுவான ஒன்று தான் என்றாலும்   தேவாலயத்தின் மேற்கூரை இடிந்து விழும் நேரத்தில் எந்தவித நிலநடுக்கமும் பதிவாகவில்லை என தெரிவித்துள்ளது.

 

மெக்சிகன்
முதல்கட்ட தகவலின் படி கட்டுமான குறைபாடுகள் காரணமாக இந்த கோர விபத்து நடந்திருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த விபத்து தேவாலயத்தின் ஒருங்கற்ற கட்டமைப்பால் ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதுவரை படுகாயம் அடைந்த 60 பேரில் 23 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் 2 பேரின் நிலைமை மோசமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த விபத்து குறித்து மெக்சிகன் பிஷப்ஸ் கவுன்சில் இரங்கல் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

From around the web