தமிழகம் முழுவதும் 9 பொறியியல் கல்லூரிகள் மூடல்... மாணவர்கள் அதிர்ச்சி!

 
பொறியியல்
 தமிழகத்தில் இன்று பொறியியல் கல்லூரிகளுக்கான கலந்தாய்வு தொடங்குகிறது. அந்த வகையில் தமிழகம் முழுவதும் அண்ணா பல்கலைக் கழகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் 442 பொறியியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. உட்கட்டமைப்பு வசதிகள் குறைவு, மாணவர் சேர்க்கை இல்லாதது என சில காரணங்களால் 9 பொறியியல் கல்லூரிகள் மூடப்படுவதாக  அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.  

 இந்த ஆண்டு பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வில் கலந்து கொள்ள தமிழகம் முழுவதும் 2 லட்சத்து 9,645 பேர் விண்ணப்பித்துள்ளனர்.  அவர்களில் 1 லட்சத்து 99,868 பேர் கலந்தாய்வில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர். இவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் ஜூலை 10ம் தேதி  வெளியிடப்பட்டது.
 தமிழகம் முழுவதும் நாளை முதல் என்ஜினீயரிங் படிப்பிற்கான துணை கலந்தாய்வு ஆரம்பம்!
இந்நிலையில், பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு இன்று காலை 10 மணிக்கு தொடங்க உள்ளது. முதல் நாளான இன்று  மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள், விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் ஆகியோருக்கான சிறப்பு பிரிவு கலந்தாய்வு நடைபெறுகிறது. தொடர்ந்து  அரசுப் பள்ளிகளில் படித்து 7.5 சதவீத ஒதுக்கீட்டில் விண்ணப்பித்தவர்களில் சிறப்பு பிரிவில் வரும் மாணவர்களுக்கும்  இன்றும், நாளையும் கலந்தாய்வு நடைபெறுகிறது. இவர்களுக்கு விளையாட்டு பிரிவில் 38 இடங்கள் , முன்னாள் ராணுவத்தினர் பிரிவில் 11 இடங்கள் , மாற்றுத் திறனாளிகள் பிரிவில் 664 இடங்கள் உள்ள நிலையில் 3 பிரிவுகளுக்கும்  சேர்த்து 404 பேர் மட்டுமே விண்ணப்பித்துள்ளனர். 
அதன்படி, மாணவர்கள் இன்று காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரை விருப்ப இடங்களை தேர்வு செய்து கொள்ளலாம்.  பின்னர் மாணவர்களுக்கான தற்காலிக ஒதுக்கீட்டு ஆணை இன்று இரவு வெளியிடப்படும். இதனையடுத்து ஒதுக்கீட்டிற்கு ஒப்புதல் அளித்து நாளை மாலை 5 மணிக்குள் மாணவர்கள் உறுதி செய்ய வேண்டும். அப்போதுதான் இறுதி ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்படும்.

கலந்தாய்வு
இதனைத் தொடர்ந்து ஜூலை25 ம் தேதி முதல் 28ம் தேதி வரை இதர சிறப்புபிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு  நடைபெறும்.  அதன்பிறகு, பொதுப் பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு 29ம் தேதி தொடங்கி செப்டம்பர் 3ம் தேதி வரை மொத்தம் 3 சுற்றுகளாக நடைபெறவுள்ளது. இதுகுறித்த  விரிவான கால அட்டவணை, கலந்தாய்வில் பங்கேற்கும் வழிமுறைகள் குறித்த அனைத்து தகவல்களும் அதிகாரப்பூர்வ இணையதளமான   https://www.tneaonline.org எனும் வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.  

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web