கொக்கைன் போதையில் மிதக்கும் சுறா மீன்கள்.. விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவல்.!

உலகம் முழுவதும் போதைப்பொருட்களின் புழக்கம் இளைஞர்களிடையே சிறு வயதிலேயே அதிகரித்து வருவது கவலையை அளிக்கிறது. அதே நேரத்தில் மனிதர்கள் மட்டுமல்ல கடல்வாழ் உயிரினங்களான மீன்களும் போதையில் மிதப்பதாக அதிர்ச்சி தரும் ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. அதன்படி பிரேசில் நாட்டில் ரியோ டி ஜெனீரியோவை ஒட்டியுள்ள கடற்கரை பகுதியில் 13 சுறா மீன்களை ஆராய்ச்சியாளர்கள் பரிசோதனை செய்தனர்.
இதில், அவற்றின் தசைகள் மற்றும் கல்லீரலில் கொக்கைன் போதைப்பொருள் கலப்பு கண்டறியப்பட்டதாக தகவல் தெரிவித்துள்ளனர்.சட்டவிரோதமாக இயங்கும் போதைப்பொருள் தயாரிப்பு ஆலைகளில் இருந்து ரசாயனம் கடலில் கலக்கப்படுவதால் இவ்வாறு நிகழ்வதாக கூறியுள்ளனர். ஓஸ்வால்டோ குரூஸ் அறக்கட்டளை நடத்திய இந்த ஆராய்ச்சி, சுறாக்களில் கொக்கைன் இருப்பதை முதலில் கண்டறிந்தது. அதாவது, சட்டவிரோத போதைப்பொருள் ஆய்வகங்களில் இருந்தோ அல்லது போதைப்பொருள் கழிவுகள் மூலமாகவோ கொக்கைன் கடலுக்குள் நுழைவதாக நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இது போதைப்பொருள் கடத்தல்காரர்களிடமிருந்து கொட்டப்பட்ட அல்லது தொலைந்த கொக்கைன் பேக்கேஜுகளை சுறாக்கள் உட்கொண்டு இருக்கலாம் என சொல்லப்படுகிறது.அத்துடன் ஆய்வு செய்யப்பட்ட அனைத்து பெண் சுறாக்களும் கர்ப்பமாக இருந்தன. பிறக்காத குழந்தைகளில் கொக்கைன் பாதிப்பு தெரியவில்லை. கொக்கைன் சுறாக்களின் நடத்தையை பாதிக்கிறதா என்பதைப் பார்க்க கூடுதல் ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளது.
ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா