கோவை மாணவி பாலியல் வன்கொடுமை... 3 பேரை சுட்டுப் பிடித்த போலீசார்!
கோவை அருகே கல்லூரி மாணவி மீதான கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் தொடர்புடைய 3 குற்றவாளிகளை போலீசார் துடியலூர் அருகே சுட்டுப் பிடித்தனர்.

மாணவி மீதான வன்கொடுமைச் சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், குற்றவாளிகளை தேடும் பணியில் சிறப்பு போலீஸ் குழு ஈடுபட்டது. இன்று அதிகாலை துடியலூர் அருகே மறைந்து இருந்த மூவர் அடையாளம் காணப்பட்டனர். போலீசாரை தாக்கி தப்பிக்க முயன்றபோது, எச்சரிக்கை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில் குற்றவாளிகள் மூவரின் காலில் குண்டு பாய்ந்தது.

காயமடைந்த மூவரும் கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர். சம்பவ இடத்துக்கு கோவை போலீஸ் உயர் அதிகாரிகள் விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் கோவை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
