கல்லூரி மாணவி விஷ ஊசி போட்டு தற்கொலை.. காதலன் திட்டியதால் சோகம்!!

 
நந்திதா

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருநாவலூரில் வசித்து வருபவர் நந்திதா. இவருக்கு வயது 19. இவர்  புதுவை லாஸ்பேட்டையில் உள்ள பல்கலைக்கழக சமுதாய கல்லூரியில் 3ம் ஆண்டு  ஆபரேசன் தியேட்டர் டெக்னாலஜி  படித்து வந்தார்.  லாஸ்பேட்டையில் உள்ள மகளிர் தங்கும் விடுதியில் தங்கி கல்லூரிக்கு சென்று வந்தார்.இந்நிலையில் நேற்று  அவர் விடுதியில் மயங்கிய நிலையில் கிடந்ததாக கூறப்படுகிறது. உடன் தங்கியிருந்த   சக தோழிகள் நந்திதாவை உடனடியாக  புதுவை அரசு மருத்துவமனையில்  சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி   நந்திதா பரிதாபமாக உயிரிழந்தார். 

ஊசி


இது குறித்து காவல்துறையினர்  வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.  நந்திதா,  கரசானூரை சேர்ந்த ராஜேஷ் என்ற இளைஞரை காதலித்து வந்தார். இருதரப்பு பெற்றோர்கள்  இதனை கடுமையாக எதிர்த்தனர்.   இதன்பின் நந்திதா, ராஜேஷுடன் பேசுவதை தவிர்த்து வந்தார்.இதனால் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இருவரும் வெவ்வேறு சாதியை சேர்ந்தவர்கள் .இதனால்  நந்திதாவை சாதியை சொல்லி ராஜேஷ் திட்டியுள்ளார். இதன் பிறகு நந்திதா மிகுந்த மன அழுத்தத்தில் இருந்து வந்தார்.

ஆம்புலன்ஸ்

தான் படிக்கும் கல்லூரி ஆய்வகத்தில் இருந்து விஷ ஊசியை எடுத்து வந்து விடுதியில் தனக்கு தானே செலுத்தி தற்கொலை செய்து கொண்டதாக முதல்கட்ட தகவல்கள்தெரிவிக்கின்றன.  இந்த தற்கொலை காரணம் குறித்து  நந்திதா கடிதம் ஒன்றையும்  எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், காதலன் ராஜேஷ் திட்டியதால் தற்கொலை செய்து கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து  நந்திதாவின் தந்தை முத்துக்குமரன் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து    ராஜேஷை  தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

From around the web