கல்லூரி மாணவி 13 வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை... கதறித் துடித்த பெற்றோர்!!

 
விஜயலட்சுமி

மாணவ , மாணவிகள் மன அழுத்தத்தில் தற்கொலை செய்து வருவது அதிகரித்து வருகிறது. எத்தனை விழிப்புணர்வு நிகழ்வுகள் நடத்தப்பட்ட போதிலும் இந்த தற்கொலைகளை தடுக்க முடியாமல் மத்திய மாநில அரசுகள் திணறி வருகின்றன. பெங்களூரு நாகரபாவி பகுதியில் வசித்து வரும் மாணவி விஜயலட்சுமி.17 வயதான இவர்  தனியார் கல்லூரி ஒன்றில்   2ம் ஆண்டு படித்து வந்தார். இவர் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக வீட்டில் யாரிடமும் பேசாமல் இருந்து வந்துள்ளார்.  இந்நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு விஜயலட்சுமி  வீட்டில் இருந்து காணாமல் போனார்.

குதித்து தற்கொலை

பயந்து போன பெற்றோர் அக்கம்பக்கத்தில் அவரை தேடிப்பார்த்தனர். நண்பர்களிடம் விசாரித்தனர். எங்கு தேடியும் அவர் கிடைக்காததால்,   காவல் நிலையத்தில்  புகார் அளித்தனர். இதையடுத்து போலீஸார் விஜயலட்சுமி குறித்து விசாரணை நடத்தி வந்தனர்.  விஜயலட்சுமி,  தர்மஸ்தலாவுக்கு சென்று,  நேத்ராவதி ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். அதனை பார்த்த  வயதானவர் ஒருவர், விஜயலட்சுமியை மீட்டார். பின்னர் அவர் கொடுத்த தகவலின்பேரில் பெங்களூரு போலீசார், விஜயலட்சுமியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். சிகிச்சைக்கு  பின்னர் அவரை பெங்களூருவுக்கு அழைத்து வரப்பட்டார்.  

ஆம்புலன்ஸ்


இந்நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில்  நாகரபாவி மைசூரு சாலையில் உள்ள குடியிருப்புபகுதிக்கு சென்றுள்ளார்.   அந்த கட்டிடத்தின் 13வது மாடிக்கு சென்று அங்கிருந்து திடீரென குதித்தார். கீழே விழுந்த விஜயலட்சுமி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டதும் உடனடியாக விரைந்து வந்த காவல்துறையினர்  விஜயலட்சுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

From around the web