டாட்டூ மோகத்தால் கல்லூரி மாணவர் பலி!! கதறித் துடித்த பெற்றோர்!!

 
டாட்டு

இன்றைய இளசுகள் லைக்குகளை வாங்க வேண்டும் என்பதற்காக கிறுக்குத்தனமாக பல செயல்களை செய்கின்றனர்.  அவை பல நேரங்களில் ஆபத்தில் முடிந்துவிடுவதும் உண்டு. இதனால் பெற்றோர்கள், நண்பர்கள், உறவினர்களுக்கு பெரும் இழப்பு ஏற்படும் என்பதை உணர்வதே இல்லை. தமிழகத்தில் பெரம்பலூர் மாவட்டத்தில் வசித்து வரும்  கல்லூரி மாணவர் பரத். இவருக்கு வயது 22. இவர், கடந்த 20 நாட்களுக்கு முன் தனது நண்பர்களுடன் புதுச்சேரிக்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்கு பல்வேறு இடங்களில் சுற்றி பார்த்தவர், புதுச்சேரி கடை வீதியில் பச்சை குத்தும் கடைக்கு சென்று தனது கழுத்து பகுதியில் நங்கூரம் படத்தை டாட்டூ குத்திக் கொண்டிருக்கிறார்.


சுற்றுலா முடிந்து சொந்த ஊர் திரும்பிய பரத் வயல் வெளியில் விவசாய பணியில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் பச்சை குத்திய பகுதியில் புண் ஏற்பட்டு நரம்பு பாதிக்கப்பட்டு அவரது அக்குளில் நெரிக்கட்டி உருவானது. நாள் ஆக ஆக பரத்திற்கு கழுத்தில் கட்டி பெரிதாகி கடுமையான தாங்கமுடியாத வலி ஏற்பட்டுள்ளது. உடனடியாக  பரத்தை அவரது குடும்பத்தார் அவரை அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதித்தனர்.  சீழ்பிடித்திருந்த கட்டியை அறுவை சிகிச்சை செய்து மருத்துவர்கள் அகற்றிவிட்டனர்.  

உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த பரத்தை மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.  அங்கு பரத்தை பரிசோதித்த மருத்துவர்கள், டாட்டூ குத்தியதால் ஏற்பட்ட உடல் பாதிப்பில் ரத்தத்தில் உள்ள தட்டணுக்களின்  எண்ணிக்கை குறைந்து உள்ளது. இதனால் அவருக்கு குறைந்த இரத்த அழுத்தம் ஏற்பட்டுவிட்டது.   தற்போதைய உடல்நிலை சிகிச்சையை ஏற்காது எனவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதனால் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையிலேயே பரத் உயிரிழந்தார். 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web